Categories: தமிழகம்

தாறுமாறாக ஓடி நேருக்கு நேர் மோதி உருக்குலைந்த தனியார் பேருந்துகள்… 4 பேர் பலியான சோகம்!!!

கடலூரில் இருந்து பண்ருட்டிக்கு இன்று காலை பயணிகளை ஏற்றிக் கொண்டு தனியார் பஸ் சென்றது. இதேபோன்று பண்ருட்டியிலிருந்து கடலூருக்கு பயணிகளை ஏற்றிகொண்டு தனியார் பேருந்து எதிரில் வந்தது.

இதில் பண்ருட்டியில் இருந்து கடலூர் நோக்கி மேல்பட்டாம்பாக்கம் சாலையில் சென்று கொண்டிருந்த போது பேருந்தின் முன்பக்க டயர் வெடித்தது.

இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் தாறுமாறாக ஓடியது. அப்போது கடலூரிலிருந்து பண்ருட்டி நோக்கி வந்த பேருந்து ஓட்டுநர் இதனை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

எதிரில் தாறுமாறாக வந்த பேருந்து மோதாமல் இருக்க, சாலை ஓரமாக பேருந்தை ஓட்டுநர் ஓட்டிச் சென்றார். இருந்தபோதும் முன் டயர் வெடித்து தாறுமாறாக வந்த பஸ், எதிரில் வந்த பேருந்து மீது நேருக்கு நேர் மோதியது.

இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் அலறினர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த, அவ்வழியே சென்றவர்கள் பேருந்தில் இருந்தவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும், போலீசாருக்கும், ஆம்புலன்சுக்கும் தகவல் அளித்தனர்.

இதில் படுகாயமடைந்த 86-க்கும் மேற்பட்டவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலமாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம், உள்ளிட்ட நெல்லிக்குப்பம் போலீசார் விரைந்து வந்தனர்.

தீயணைப்புத் துறை வீரர்களை உதவிக்கு அழைத்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். மேலும், அப்பகுதியில் இருந்த வாலிபர்களும் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இதில் தனியார் பேருந்து ஓட்டுநர் ஒரு மணி நேரத்திற்கு பின்னர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டார். இன்று காலை 10 மணிக்கு விபத்து நடந்தது. தொடர்ந்து காலை 11.30 மணிவரை மீட்பு பணிகள் நடந்து வருகிறது. மீட்பு பணிகள் முடிந்த பிறகே, எத்தனை பேர் உயிரிழந்தனர்.

அவர்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள், படுகாயமடைந்தவர்கள் எத்தனை பேர் என்பதை சரியாக சொல்ல முடியும் என போலீசார் தெரிவித்தனர். பேருந்து விபத்தில் காயமடைந்தவர்கள் அனைவரையும் கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதனை கேள்விப்பட்ட பயணிகளின் உறவினர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் குவிந்தனர். இதனால் அங்கு பரபரப்பான நிலை காணப்பட்டது.

முதல்கட்ட விசாரணையில் பலியானர்களில் ஒருவர் பண்ருட்டியை சேர்ந்த சீனுவாசன் என்பதும், மற்றொருவர் துர்கா பேருந்து ஓட்டுநர் நெல்லிக்குப்பத்தை சேர்ந்த அங்காளமணி என்பதும் மற்றொருவர் சுகம் பேருந்து நடத்துனர் முருகன் என்பதும் மற்றும் ஒருவர் என 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

இச்சம்பவத்தால் பண்ருட்டி-கடலூர் சாலையில் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. காயம் அடைந்தவர்கள் பெரும்பாலானோர் காலையிலேயே அலுவலகம் வந்தவர்கள் பள்ளி கல்லூரிக்கு வந்தவர்கள்.

மேலும் காயம் அடைந்தவர்களை சட்டமன்ற உறுப்பினர்கள் ஐயப்பன், வேல்முருகன் மற்றும் கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரிராஜா மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் உள்ளிட்டோர் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

பார்த்தாலே தெரியுது, படம் ஃபிளாப்னு- பிரபாஸின் புது பட டீசரால் கடுப்பான ரசிகர்கள்…

பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…

2 hours ago

அதிமுக மூத்த தலைவருடன் திருமாவளவன் திடீர் சந்திப்பு… செல்லூர் ராஜு சொன்ன விளக்கம்!

மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…

2 hours ago

முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்க முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அழைப்பு.. டுவிஸ்ட் வைத்த பாஜக!

மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…

2 hours ago

வடசென்னை 2 டிராப்? வெளிப்படையாக போட்டுடைத்த வெற்றிமாறன்!

மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…

2 hours ago

ஜெகன்மூர்த்தி வீட்டுக்கு சென்ற பொற்கொடி ஆம்ஸ்டிராங்.. மனைவியை சந்தித்து ஆதரவு..!

காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக கூறி நேற்று 300க்கும் மேற்பட்ட போலீசார் ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை செய்வதற்காக திருவள்ளுர்…

3 hours ago

இவருக்கு இப்படி ஒரு முகம் இருக்கா? வீட்டு விசேஷத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் செய்த காரியம்! வைரல் வீடியோ…

இந்தியாவின் முன்னணி இயக்குனர் இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து “மதராஸி” திரைப்படத்தை…

3 hours ago

This website uses cookies.