தனியார் கல்லூரி பேருந்தை, அரசு பள்ளி சீருடையுடன் மாணவன் ஒருவர் இயக்கிய வீடியோ சமூக வளைதளங்களில் பரவி வந்தது.
சேலம் ஸ்ரீ சக்தி கைலாஷ் மகளிர் கல்லூரி என்று எழுதப்பட்ட பேருந்தை, அரசு பள்ளி சீருடையுடன் மாணவன் ஒருவர் இயக்கிய வீடியோ சமூக வளைதளங்களில் பரவி வந்தது. இது தொடர்பான விசாரணையில், சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த ஜலகண்டாபுரம் அருகில் உள்ள பக்கநாடு கிராமத்தைச் சார்ந்த சந்திரசேகர் என்பவர் ஓமலூரில் உள்ள தனியார் (ஏ.வி.எஸ். கலை அறிவியல்) கல்லூரி பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார்.
கடந்த செப்டம்பர் 14-ம் தேதி அந்த பேருந்து பழுது ஏற்பட்டதால், அதே நிர்வாகத்திற்கு சொந்தமாக சேலம் அம்மாபேட்டையில் இயங்கி வரும் மகளிர் கல்லூரி பேருந்தை எடுத்து சென்றுள்ளார்.
மாணவர்கள் அனைவரையும் இறக்கிவிட்ட பிறகு, வழக்கம் போல் அவரது இல்லத்திற்கு சென்றுகொண்டிருந்தபோது, அவரது அண்ணன் மகன் குணா என்ற பிளஸ் டூ மாணவன் சிறிது தூரம் பேருந்தை ஓட்டியுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. 18 வயதுக்கு குறைவான ஒருவர் பேருந்தை இயக்கியுள்ள போக்குவரத்து விதிமீறலுக்கான தண்டனை, மாணவனுக்கா? பெற்றோருக்கா? கல்லூரிக்கா என்ற சர்சையும் எழுந்தது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.