தனியார் கல்லூரி பேருந்தை, அரசு பள்ளி சீருடையுடன் மாணவன் ஒருவர் இயக்கிய வீடியோ சமூக வளைதளங்களில் பரவி வந்தது.
சேலம் ஸ்ரீ சக்தி கைலாஷ் மகளிர் கல்லூரி என்று எழுதப்பட்ட பேருந்தை, அரசு பள்ளி சீருடையுடன் மாணவன் ஒருவர் இயக்கிய வீடியோ சமூக வளைதளங்களில் பரவி வந்தது. இது தொடர்பான விசாரணையில், சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த ஜலகண்டாபுரம் அருகில் உள்ள பக்கநாடு கிராமத்தைச் சார்ந்த சந்திரசேகர் என்பவர் ஓமலூரில் உள்ள தனியார் (ஏ.வி.எஸ். கலை அறிவியல்) கல்லூரி பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார்.
கடந்த செப்டம்பர் 14-ம் தேதி அந்த பேருந்து பழுது ஏற்பட்டதால், அதே நிர்வாகத்திற்கு சொந்தமாக சேலம் அம்மாபேட்டையில் இயங்கி வரும் மகளிர் கல்லூரி பேருந்தை எடுத்து சென்றுள்ளார்.
மாணவர்கள் அனைவரையும் இறக்கிவிட்ட பிறகு, வழக்கம் போல் அவரது இல்லத்திற்கு சென்றுகொண்டிருந்தபோது, அவரது அண்ணன் மகன் குணா என்ற பிளஸ் டூ மாணவன் சிறிது தூரம் பேருந்தை ஓட்டியுள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. 18 வயதுக்கு குறைவான ஒருவர் பேருந்தை இயக்கியுள்ள போக்குவரத்து விதிமீறலுக்கான தண்டனை, மாணவனுக்கா? பெற்றோருக்கா? கல்லூரிக்கா என்ற சர்சையும் எழுந்தது.
படுதோல்வியடைந்த சிக்கந்தர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் பாலிவுட்டில் கடந்த மார்ச் மாதம் வெளியான “சிக்கந்தர்”…
காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் பகுதியை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான நவமணி வயது 31 என்பவர் அதே பகுதியில் ஒன்பதாம்…
மாறன் குடும்பத்தில் ஏற்பட்ட புகைச்சல் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சன் டிவி பங்கு தொடர்பாக கலாநிதி மாறனுக்கு தயாநிதி மாறன்…
வெளியானது குபேரா தனுஷ் நடிப்பில் சேகர் கம்முலா இயக்கத்தில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் “குபேரா”. இத்திரைப்படத்தில் தனுஷுடன் நாகர்ஜுனா,…
சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா…
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
This website uses cookies.