விருதுநகர் : மாதத் தவணை கட்ட தாமதமானதால் கடன் பெற்ற நபரை தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் அடித்து துவைத்த காட்சிகள் செளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் அல்லம்பட்டி பகுதியைச் சார்ந்தவர் சோலைராஜ் இவர் பேப்பர் டீலராக தொழில் செய்து வரும் நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு பஜாஜ் பைனான்ஸ் என்ற தனியார் நிறுவனத்தில் தனிநபர் கடனாக ரூபாய் 60,000 பெற்றதாக கூறப்படுகிறது.
அதைமாதத் தவணையாக ரூபாய் 2288ரூபாய் செலுத்தி வரும் நிலையில் இந்தமாதத்திற்கான தவணை தொகை செலுத்த காலதாமதம் ஆனதாக கூறப்படுகிறது.
இதனால் பஜாஜ் பைனான்ஸ் நிதி நிறுவனத்தில் பணிபுரியும் சிவா என்பவர் சோலைராஜுக்கு போன் செய்து தகாத வார்த்தையில் பேசி அல்லம்பட்டி முக்கு ரோட்டில் உள்ள தனியார் உணவகத்திற்கு வர சொன்னதாகவும் ,அங்குவந்த சோலைராஜை சிவா மற்றும் அதே நிறுவனத்தில் பணிபுரியும் மேலும் நான்கு நபர்கள் இணைந்து சோலை ராஜை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதனால் காயமடைந்த சோலைராஜ் விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுகுறித்து சோலைராஜ் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறை விசாரணை மேற்கொண்டு தனியார் உணவக சிசிடிவி காட்சியை ஆய்வு செய்ததில் அந்த சிசிடிவி காட்சிகளில் தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் சோலை ராஜ் என்பவரை சரமாரியாக தாக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளது.
தற்போது அந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. கடன் பெற்று தவணை செலுத்த காலதாமதம் ஆனதால் நிதி நிறுவன ஊழியர்கள் ஒருவரை தாக்குவது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து விருதுநகர் கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.