தமிழகம்

கிண்டி மருத்துவமனை விவகாரத்தில் திடீர் திருப்பம்.. தாயார் மீது பரபரப்பு புகார்!

சென்னை கிண்டி மருத்துவமனை மருத்துவரை கத்தியால் குத்திய இளைஞரின் தாயார் மீது தனியார் மருத்துவமனை மருத்துவர் பரபரப்பு புகார் ஒன்றை அளித்து உள்ளார்.

சென்னை: சென்னை கிண்டியில் உள்ள அரசு கலைஞர் நூற்றாண்டு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் பணியாற்றும் புற்றுநோய் மருத்துவர் பாலாஜியை, விக்னேஷ் என்ற இளைஞர் கத்தியால் குத்திய சம்பவம், பொதுமக்கள் மட்டுமல்லாது, அரசு மருத்துவர்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதனையடுத்து, மருத்துவர் பாலாஜி தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வரும் நிலையில், தான் நலமுடன் உள்ளதாக அவரே வெளியிட்ட வீடியோ அதனை உறுதிப்படுத்தியது. அதேநேரம், மருத்துவரைத் தாக்கிய விக்னேஷ் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டு, 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார்.

இதனிடையே, கைதான இளைஞர் விக்னேஷின் உறவினர்கள், மருத்துவர் பாலாஜி சரியாக சிகிச்சை அளிக்கவில்லை என்பதால், அடுத்தடுத்து இரண்டு தனியார் மருத்துவமனைகளில் சென்று தனது தாய்க்கு சிகிச்சை அளித்ததாகவும், அதில் ஒரு மருத்துவர் அரசு மருத்துவமனையில் முறையான சிகிச்சை அளிக்கவில்லை எனக் கூறியதாகவும் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், கக்தியால் குத்திய விக்னேஷின் தாயார் பிரேமா மற்றும் விக்னேஷின் சகோதரர் லோகேஷ் மீது தனியார் மருத்துவமனை மருத்துவர் ஜேக்கின் மோசஸ் eன்பவர் காவல் ஆணையர் அலுவலகத்தில், தன் மீது அவதூறு பரப்பி வருவதாக புகார் அளித்துள்ளார்.

இதையும் படிங்க: பற்றிய நெருப்பு.. தீயில் கருகிய 10 குழந்தைகள்.. உ.பியில் சோகம்!

இதன்படி, அந்தப் புகாரில், “சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி சரியாக சிகிச்சை அளிக்கவில்லை, அவருக்கு அங்கு வழங்கப்பட்ட மருந்தால் தான் நோயாளி உடல்நிலை மோசமடைந்தது என நான் கூறியதாக தவறான கருத்துகளை பேட்டிகளில் தெரிவித்து வருகின்றனர்.

நுரையீரல் தொடர்பான பிரச்சனைக்கு 3 முறை என்னிடம் பிரேமா சிகிச்சை எடுத்து உள்ளார். எனது அறிவுறுத்தலின் பேரில், கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் பிரேமா அனுமதிக்கப்பட்டார். என்னைப் பற்றி அவதூறு பரப்பி வரும் பிரேமா மற்றும் லோகேஷ் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டு உள்ளார்.

Hariharasudhan R

Recent Posts

பார்த்தாலே தெரியுது, படம் ஃபிளாப்னு- பிரபாஸின் புது பட டீசரால் கடுப்பான ரசிகர்கள்…

பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…

24 minutes ago

அதிமுக மூத்த தலைவருடன் திருமாவளவன் திடீர் சந்திப்பு… செல்லூர் ராஜு சொன்ன விளக்கம்!

மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…

28 minutes ago

முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்க முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அழைப்பு.. டுவிஸ்ட் வைத்த பாஜக!

மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…

48 minutes ago

வடசென்னை 2 டிராப்? வெளிப்படையாக போட்டுடைத்த வெற்றிமாறன்!

மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…

1 hour ago

ஜெகன்மூர்த்தி வீட்டுக்கு சென்ற பொற்கொடி ஆம்ஸ்டிராங்.. மனைவியை சந்தித்து ஆதரவு..!

காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக கூறி நேற்று 300க்கும் மேற்பட்ட போலீசார் ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை செய்வதற்காக திருவள்ளுர்…

2 hours ago

இவருக்கு இப்படி ஒரு முகம் இருக்கா? வீட்டு விசேஷத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் செய்த காரியம்! வைரல் வீடியோ…

இந்தியாவின் முன்னணி இயக்குனர் இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து “மதராஸி” திரைப்படத்தை…

2 hours ago

This website uses cookies.