கோவை அவிநாசி சாலையில் உள்ள குப்புசாமி நாயுடு தனியார் மருத்துவமனையில் பிரியா என்ற டெண் செவிலியராக பணியாற்றி வருகிறார்.
மருத்துவமனையில் உள்ள மகளிர் விடுதியில் தங்கி பணி புரிந்து செவிலியர் பிரியாவுக்கும், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் சேர்ந்த சுஜித் என்ற இளைஞருக்கும் காதல் இருந்து வந்து உள்ளது.
இதையும் படியுங்க: நடத்துனரின் காதை கத்தரிக்கோலால் வெட்டிய சிறுவன்.. தென்காசியில் பரபரப்பு!
சுஜித்தின் நடவடிக்கைகள் பிடிக்காததால் பிரியா அவருடன் பழகுவதையும், பேசுவதையும் தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த மருத்துவமனையில் உள்ள பெண்கள் விடுதிக்குள் அனுமதியின்றி உள்ளே நுழைய முயன்ற சுஜித்தை அங்கு பணியில் உள்ள விடுதிக் காப்பாளர் தடுத்து உள்ளார்.
அவரை கடுமையான வார்த்தைகளில் பேசி உள்ளே சென்ற சுஜித், பிரியாவின் கழுத்தை நெரித்து கத்தியால் குத்த முற்பட்டு உள்ளார். பிரியா தப்ப முயன்ற போது அவரது கைகளில் வெட்டுக் காயம் உண்டானது.
இதை அடுத்து அங்கு வந்த விடுதிக் காப்பாளர்கள் மற்றும் மருத்துவமனை காவலாளிகள் சுஜித்தை பிடித்து ரேஸ் கோர்ஸ் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதை அடுத்து விடுதிக் காப்பாளர் அளித்த புகாரில் பேரில் பந்தய சாலை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து சுஜித்தை சிறையில் அடைத்தனர்.
காவல் துறையினரின் முதற்கட்ட விசாரணையில் பிரியாவும், சுஜித்தும் சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும், பிரியா திடீரென பேசுவதை நிறுத்தியதால் சுஜித் ஆத்திரம் அடைந்து இந்த கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதே மருத்துவமனையில் செவிலியரின் குடும்ப பிரச்சனை காரணமாக அவரை அவரது கணவர் கொலை செய்தது குறிப்பிடத்தக்கது.
கதாநாயகனாக அறிமுகமாகும் சூர்யா சேதுபதி விஜய் சேதுபதியின் மகனான சூர்யா சேதுபதி கதாநாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் “பீனிக்ஸ்”. சூர்யா சேதுபதி…
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே அஞ்செட்டி அடுத்துள்ள மாவனட்டி கிராமத்தை சேர்ந்தவர் சிவராஜ் (40).இவர் சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார்.…
ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யாஷ் ஆகியோரின் நடிப்பில் பிரம்மாண்ட திரைப்படமாக உருவாகி வரும் திரைப்படம் “இராமாயணா”. இத்திரைப்படம் இரண்டு…
திருப்புவனத்தில் பலியான அஜித்குமாரின் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய தமிழக முன்னேற்றகழக தலைவர் ஜான் பாண்டியன் பின்னர் செய்தியாளர்களை…
சமூக சேவை செய்யும் KPY பாலா! விஜய் தொலைக்காட்சியில் “கலக்கப்போவது யாரு” நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாக அறியப்பட்டவர் KPY பாலா.…
This website uses cookies.