எமன் வடிவத்தில் வந்த நாய்.. தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் விபத்தில் பலி : முதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!!!
திருநெல்வேலி பாலிமர் தொலைக்காட்சியின் செய்தியாளராக இருந்து வந்தவர் முத்துக்குமாரசாமி (52). இவர் நேற்று இரவு பணி முடித்துவிட்டு தனது இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பிக்கொண்டு இருந்தார்.
தாழையூத்து அருகே சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக சாலையின் குறுக்கே நாய் ஒன்று ஓடி வந்திருக்கிறது.
அதற்காக அவசரமாக வண்டியை திருப்பியவர் சாலை தடுப்பானில் மோதி நிலைத்தடுமாறி கீழே விழுந்தார். அதில் முகம், தலையில் பலத்த அடிபட்டு நினைவை இழந்தார்.
அதனையடுத்து அவர் திருநெல்வேலி ஹை கிரவுண்ட் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து தாழையூத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த செய்தியாளர் முத்துக்குமாரசாமிக்கு சூரிய கல்யாணி என்ற மனைவியும், சுப்பிரமணியன் என்ற மகன், ஹரிணி என்ற மகளும் உள்ளனர். விபத்தில் செய்தியாளர் உயிரிழந்துள்ள சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் செய்தியாளர் மரணத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். 30 வருடமாக நெல்லையில் செய்தியாளராக பணியாற்றி வரும் முத்துக்குமாரசாமி உயிரிழந்த செய்தி வேதனை அளிப்பதாகவும், அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதாகவும், மேலும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.3 லட்சம் அவரது குடும்பத்திற்கு வழங்க உத்தரவிட்டுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.