அதுக்காக மட்டும் தான் இந்த படத்தில் அவர் நடித்தார்.. உண்மையை ஓப்பனாக சொன்ன பிரியா பவானி சங்கர்..!

Author: Rajesh
28 April 2022, 2:46 pm
Quick Share

சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக இருந்து சினிமாவிற்குள் வந்தவர் பிரியா பவானி ஷங்கர். நியூஸ் Anchor ஆக தனது Career-ஐ தொடங்கிய பிரியா, விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை தொடரின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

அதன்பின் மேயாதமான் படத்தின் மூலம் சினிமாவில் வந்த இவர் பெரிதும் கவனிக்கப்பட்டார். அடுத்த படமே பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தியுடன் நடிக்க கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடிக்க, எல்லோர் மத்தியிலும் பிரபலம் ஆனார். அதன்பின் கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாஃபியா படத்தில் நடித்தார், ஆனால் அது சரியாக ஓடவில்லை. அதன் பிறகு களத்துல சந்திப்போம் படம் சுமாராக ஓடியது.

இப்போது ஹாட்ஸ்டார் இல் ரிலீஸான ‘ஓ மன பெண்ணே’ மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் சில நாட்களுக்கு முன் Release ஆன Blood Money என்கிற படமும் ஓரளவுக்கு வரவேற்பு இருக்கிறது.

தற்போது ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். தற்போது பல படங்களில் பிஸியாக நடித்து வரும் பிரியா பவானி ஷங்கர், இவ்வளவு பிஸியாக நடித்துக் கொண்டிருந்தாலும் சோசியல் மீடியாவில் தனது ரசிகர்களுக்கு தரிசனம் கொடுக்க இவர் தவறுவதே இல்லை. அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

இந்த நிலையில், அசோக் செல்வனுடன் இணைந்து நடித்துள்ள ஹாஸ்டல் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இப்படம் படம் குறித்து நடிகை பிரியா பவானி சங்கர் பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். அதன்படி அவர் கூறியிருப்பதாவது, ‘இயக்குனர் ஹாஸ்டல் படத்தின் கதையை கூறியபோது எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. ஆனால் இந்த கதையில் ஹீரோவாக அசோக் செல்வன் நடித்தால் மிகவும் பொருத்தமாக இருக்கும் என இயக்குனர் கூறினார்.

எனவே நான் நடிகர் அசோக்செல்வனுக்கு போன் செய்து ஹாஸ்டல் படத்தின் கதையை கூறினேன். அவருக்கும் இந்த கதை மிகவும் பிடித்துவிட்டது. ஆனால் கால்ஷீட் பிரச்சனை காரணமாக அசோக் செல்வனால் ஹாஸ்டல் படத்தில் நடிக்க முடியாமல் போனது. ஆனால் என்னிடம் கொண்ட நட்பிற்காக மட்டுமே இந்த படத்தில் நடிக்க அசோக் செல்வன் ஒப்புக்கொண்டார்’ என கூறியுள்ளார்.

Views: - 1229

13

1