மெழுகு சிலை பிரியங்கா மோகனின் அடுத்த டார்க்கெட் இவரா.? வெளியான தகவல்.!

சாணிக்காயிதம், ராக்கி படங்கள் மூலம் கவனம் ஈர்த்தவர் தான் இயக்குநர் அருண் மாதேஸ்வரன். அடுத்ததாக, தனுஷை வைத்து ஒரு படம் இயக்கவிருக்கிறார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் சார்பில் தயாரிக்கப்படும் இப்படத்துக்கு கேப்டன் மில்லர் என பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கர்ணன் படத்துக்கு பிறகு தனுஷ் நடித்த ஜகமே தந்திரம், மாறன் ஆகிய படங்கள் படுதோல்வியை சந்தித்தன. தற்போது தனுஷ் நடிப்பில் திருச்சிற்றம்பலம் படம் ரிலீஸுக்கு ரெடியாக இருக்கிறது. அதேபோல் ஹாலிவுட் படமான தி கிரே மேன் படமும் வெளியீட்டுக்கு தயார் நிலையில் உள்ளது. சமீபத்தில்தான் இதன் ட்ரெய்லர் வெளியானது.

தனது முந்தைய இரண்டு படங்களும் தோல்வியை சந்தித்ததால் உடனடியாக கம்பேக் கொடுக்க வேண்டுமென்பதில் தனுஷ் திவீரமாக இருக்கிறார். மேலும் திருச்சிற்றம்பலம் படமும், தி கிரே மேன் படமும் நிச்சயம் அவருக்கு கம்பேக் கொடுக்கும் என அவர் ரசிகர்களும் எதிர்பார்த்திருக்கின்றனர். இதற்கிடையே அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் முதல்முறையாக நடிக்கவிருப்பதால் அந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் பல மடங்கு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் தனுஷ் – அருண் மாதேஸ்வரன் இணையும் படத்தில் ப்ரியங்கா மோகன் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதற்கான பேச்சுவார்த்தை முடிந்துவிட்டதாகவும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகுமெனவும் கூறப்படுகிறது.
முன்னதாக ப்ரியங்கா மோகன் நடித்த டாக்டர், டான் உள்ளிட்ட படங்கள் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது

UpdateNews360 Rajesh

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.