மதுரை திருமங்கலம் பாண்டியன் நகர் பகுதியை சேர்ந்த பரமேஸ்வரி (வயது 29) என்ற பெண் கரகாட்ட கலைஞர். இவரது கணவர் 3 ஆண்டுகளுக்கு முன்பாக உயிரிழந்த நிலையில் தற்போது அவரது தாயாருடன் தனியாக வசித்து வருகிறார்.
இந்நிலையில் பல்வேறு கரகாட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு ஆடிவருகிறார். அந்த வீடியோக்களை பேஸ்புக் , இன்ஸ்டா, மற்றும் PATTAMPOOCHI என்ற யூடியுப் ரீல்ஸ் போன்ற சமூகவலைதளங்களில் வீடியோக்களாக பதிவிட்டுவருகிறார்.
இந்நிலையில் பரமேஸ்வரிக்கு சமூகவலைதளங்கள் மூலமாக பிரபலமானார். இந்நிலையில் பரமேஸ்வரி கரகாட்டம் என்ற பெயரில் கரக கலைக்கு எதிராக செயல்படுவதாகவும், நையாண்டி கலைஞர்கள் இன்றி கரகாட்டம் ஆடுவதால் நையாண்டி கலைஞர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.
மேலும் பரமேஸ்வரி கரகாட்டம் ஆடும்போது சாதி, மத உணர்வுகளை தூண்டும் வகையிலான கொடிகளை கட்டி ஆடுவதால் மோதல் ஏற்படும் நிலை உள்ளதாக எதிர்ப்பு தெரிவித்து பரமேஸ்வரிக்கு எதிராக புகார் அளித்தனர்.
இந்நிலையில் பரமேஸ்வரி சினிமா பாடல்களுக்கு கரகாட்டம் ஆடுவதால் கரக கலைக்கு எதிராக செயல்படுவதாகவும் , பரமேஸ்வரி மீது காவல்துறையினர் நடவடிக்கைகள் எடுக்க கோரியும், பரமேஸ்வரி தொடர்பான யூடியுப், ட்விட்டர், இன்ஸ்டா உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட இணைய தள பக்கங்களை தமிழக அரசு முடக்க வேண்டும் என வலியுறுத்தி இன்று தமிழ்நாடு கிராமிய கலைஞர்கள், மேளக்கலைஞர்கள், கரகாட்ட கலைஞர்கள்,அகில இந்திய கலைக்குடும்பங்கள் சங்கத்தை சேர்ந்த ஏராளமான கரகாட்ட கலைஞர்கள் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பரமேஸ்வரிக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதனை தொடர்ந்து ஊர்வலமாக சென்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை வழங்கினா்.
திருப்பூரைச் சேர்ந்த தமிழர் ஒருவர் கத்திகுத்தால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தின் படியூர் பகுதியைச்…
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
This website uses cookies.