தமிழகம்

18 நாட்கள் செல்போனில் சிக்கிய பேராசிரியர்.. முக்கிய நபர் கைதானது எப்படி?

உத்தரகாண்டில் டிஜிட்டல் அரஸ்டில் 18 நாட்கள் பேராசிரியர் சிக்கி 47 லட்சத்தை இழந்தது தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலம், நைனிடாலில், உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவைச் சேர்ந்த 58 வயது பேராசிரியர் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், இவரை கடந்த டிசம்பர் மாதம் 5ஆம் தேதி மர்ம கும்பல் ஒன்று செல்போன் மூலம் தொடர்பு கொண்டுள்ளது.

இதன்படி, தங்களை சிபிஐ அதிகாரிகள் எனக் கூறிய அவர்கள், பேராசிரியரை டிஜிட்டல் அரஸ்ட் செய்துள்ளோம் எனக் கூறி மிரட்டியுள்ளனர். இதனைத் தொடர்ந்து பேராசிரியர், பல்கலைக்கழகம் செல்வதற்கும், சாப்பிடுவதற்கும் அவர்களது அனுமதியைப் பெற்றே ஆக வேண்டும் என்றும் அவர்கள் மிரட்டியுள்ளனர்.

மேலும், அவரது வங்கிக் கணக்கிலிருந்து 47 லட்சம் ரூபாயையும் அவர்கள் நூதனமாக கொள்ளையடித்துள்ளனர். இவ்வாறு சுமார் 18 நாட்கள் வரை பேராசிரியரை டிஜிட்டல் அரஸ்ட்டில் வைத்திருந்துள்ளனர். இதனையடுத்து, விடுவிக்கப்பட்ட அவர், கடந்த வாரம்தான் இது குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார்.

மேலும், இதுகுறித்து போலீஸ் டிஎஸ்பி அங்குஷ் மிஸ்ரா கூறுகையில், “ஒருவரை 18 நாட்கள் டிஜிட்டல் அரஸ்டில் வைத்திருந்தது இதுவே முதல்முறையாகும். இது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள அமன் குஷ்வாஹா என்பவர்தான், இவரது வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை எடுத்துள்ளார்.

இதையும் படிங்க: What Bro.. Why Bro? சரத்குமார் கடும் தாக்கு! தொடரும் நடிகர்களின் விமர்சனம்?

அது மட்டுமல்லாமல், இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியைத் தேடி வருகிறோம். டிசம்பர் 5ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை அவரை டிஜிட்டல் அரஸ்ட்டில் வைத்து மிரட்டியுள்ளனர்” எனத் தெரிவித்துள்ளனர்.

டிஜிட்டல் அரஸ்ட் என்றால் என்ன? Digital Arrest என்பது சிபிஐ உள்ளிட்ட மத்திய அரசு தொடர்புடைய அதிகாரி பேசுவதாக ஒரு செல்போன் அழைப்பு வரும். அவர்கள், உங்களது முறையற்ற பொருள் ஒன்று தங்களிடம் சிக்கியிருப்பதாகவும், அதிலிருந்து தப்பிக்க பணம் வேண்டும் எனவும் மிரட்டி, அவர்களை தங்களது கட்டுப்பாட்டிலே வைத்திருப்பர்.

Hariharasudhan R

Recent Posts

தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?

யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…

13 hours ago

ஊழல் கூட்டணி எங்களை பற்றி பேசுவதை பார்த்தால் சிரிப்பு தான் வருது : இறங்கி அடிக்கும் நிர்மலா சீதாராமன்!

சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…

15 hours ago

லோகேஷ் கனகராஜ்ஜுக்கும் அந்த விபரீத ஆசை வந்திடுச்சா? விரைவில் எடுக்கப்போகும் புதிய அவதாரம்!

லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…

15 hours ago

திருத்தணி கோவிலில் குடும்பஸ்தன் பட பாணியில் திருமணம்… ரகளைக்கு நடுவே நடந்த கலாட்டா காதல் கல்யாணம்!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…

16 hours ago

சந்தோஷ் நாராயணனை அவமானப்படுத்திய நபர்! விழுந்து விழுந்து சிரித்த சூர்யா? இப்படியா பண்றது?

கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…

16 hours ago

முழு சந்திரமுகியாக மாறிவரும் சங்கி : பிரபல பத்திரிகையை விளாசிய தவெக ராஜ்மோகன்!

விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…

17 hours ago

This website uses cookies.