கோவை ரேஸ்கோர்ஸ் திருஞானசம்பந்தம் ரோட்டில் ரெனைசன்ஸ் டவரில் எஸ்.கே.எம். டிரேடர்ஸ் என்ற எம்.எல்.எம். நிறுவனம் செயல்பட்டு வந்தது.
பாலச்சந்திரன் என்பவர் 2018 முதல் இந்த நிறுவனத்தை நடத்தினார்.
‘முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும்’ என்று அவர் ஆசை வார்த்தை கூறியதை நம்பி, கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் 300க்கும் மேற்பட்டோர் முதலீடு செய்தனர்.
அவர்களுக்கு அசல், வட்டி எதுவும் தராமல் பாலச்சந்திரன் ஏமாற்றி விட்டார். இது தொடர்பாக, மாநகர போலீஸ் கமிஷனரிடம் ஏற்கனவே புகார்கள் தரப்பட்டிருந்தன.
இந்த நிலையிலே எஸ்.கே.எம்., டிரேடர்ஸ் நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட பீளமேடு நேரு நகர் நான்காம் மேற்கு வீதியை சேர்ந்த கணேசன் (வயது 51) என்பவர் காட்டூர் போலீசாரிடம் புகார் அளித்தார்.
தான் 3 லட்சம் ரூபாய் முதலீடு செய்ததாகவும், அதற்கு அசல், வட்டி தராமல் ஏமாற்றி விட்டதாகவும் புகார் தந்திருக்கின்றார். புகாரின் அடிப்படையில் விசாரித்த காவல் துறையினர் பாலச்சந்திரன் உட்பட மூவர் மீது வழக்கு பதிந்தனர்.
நிதி நிறுவன உரிமையாளர் பாலச்சந்திரனை கைது செய்த போலிஸார் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.