Categories: தமிழகம்

கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்… இன்னும் 20 நாட்களில் : சென்னை மக்களுக்கு அமைச்சர் உறுதி!!!

கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்… இன்னும் 20 நாட்களில் : சென்னை மக்களுக்கு அமைச்சர் உறுதி!!!

திருவள்ளூர், மாவட்டம் மீஞ்சூர் அருகே உள்ள காட்டுப்பள்ளி கடல் நீரை குடிநீராக்கும் 100 எம் எல் டி ஆலையை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே. என். நேரு அமைச்சர் ஆர் காந்தி எம்பி ஜெயகுமார் ஆகியோருடன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சட்டமன்ற உறுப்பினர்கள் துரை சந்திரசேகர் கோவிந்தராஜன்
கிருஷ்ணசாமி ஆகியோர் ஆய்வில் உடன் இருந்தனர்.

சென்னை புறநகர் பகுதியான மீஞ்சூர் செம்பரம்பாக்கம் புழல் சோழவரம் உள்ளிட்ட பகுதிகளில் குடிதண்ணீரை முறையாக வழங்கிட நடவடிக்கை எடுக்க அறிக்கை தயார் செய்து முதலமைச்சர் உடன் பேசி வேண்டிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் மீஞ்சூர் பொன்னேரி அனுப்பம்பட்டு சுற்று வட்டாரங்களில் உப்பு நீர் கலந்து வருவதை தடுக்க முதல்வரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

காட்டுப்பள்ளி 100 எம் எல் டி கடல் நீரை குடிநீர் ஆக்கும் ஆலையில் உபகரணங்கள் அனைத்தும் பழுதாகி விட்டன என்றும் 50 எம் எல் டி மட்டுமே குடிநீர் உற்பத்தி நடைபெறுவதாகவும் விரைவில் திட்ட அறிக்கை தயார் செய்து பழுதுகள் சரி செய்யப்பட்டு முறையாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி தெரிவித்தார்.

சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய போதிய தண்ணீர் கையிருப்பு உள்ளது என்றும் பூண்டி புழல் நீர் தேக்கங்களில்
13 டிஎம்சி கொள்ளளவில் தற்போது 9 டிஎம்சி தண்ணீர் இருப்பு உள்ளது என்றும், 1000எம் எல் டி சென்னை குடிநீருக்கு வழங்கப்பட்டு வருவதாகவும் 20 நாட்களில் 150 எம்.எல்.டி கடல் நீரை குடிநீர் ஆக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

மீஞ்சூர் சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு காட்டுப்பள்ளி கடல் நீரை குடிநீர் ஆக்கும் ஆலையிலிருந்து தண்ணீரை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் திட்ட அறிக்கை தயார் செய்து விரைவில் பணிகள் துவங்க உள்ளது என அவர் தெரிவித்தார்..

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

இரத்தக்காட்டேரியாக மாறும் கியூட் நடிகை? ராஷ்மிகா மந்தனாவின் புதிய ஹாரர் படத்தின் கதை இதுதானா?

நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…

14 hours ago

வெகு கால இடைவெளிக்குப் பிறகு டிவி பேட்டியில் தோன்றும் அஜித்! அதிசயம் ஆனால் உண்மை!

பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…

16 hours ago

Bye Bye Stalin என மக்கள் சொல்லும் போது சட்டை கிழித்து தவழாமல் இருந்தால் சரி : இபிஎஸ் விமர்சனம்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…

16 hours ago

சிம்புவே ரெடி; ஆனா ஷூட்டிங் ஆரம்பிக்கல! இயக்குனர் செய்த காரியத்தால் தள்ளிப்போகும் STR 49?

STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…

17 hours ago

அஜித் விருது வாங்கிய நேரம்.. ஹீரா குறித்து அவதூறு : பின்னணியில் அரசியலா?

நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…

17 hours ago

அவருக்கு நான் அம்மாவா? கடுப்பான கஸ்தூரி : எந்த நடிகர்னு தெரியுமா?!

தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…

18 hours ago

This website uses cookies.