Categories: தமிழகம்

கோவையில் ஒரு RED LIGHT AREA.. விடுதி என்ற பெயரில் விபச்சாரம்… ரூ.2 ஆயிரம் கொடுத்தால் இரண்டு அழகிகள் : பகீர் தகவல்!!

கோவை : மேட்டுப்பாளையம் கல்லார் பகுதியில் விபச்சாரத்தில் ஈடுபட்ட அழகி மற்றும் விடுதி உரிமையாளர் கைது.

நீலகிரி மாவட்டம் எம் பாலடா பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி மகன் சந்தோஷ் (வயது 38). இவர் தன் மனைவி இரண்டு மகனுடன் குடியிருந்து கொண்டு விவசாயம் செய்து வருகிறார்.

இவர் காய்கறிகளை மேட்டுப்பாளையம் மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு கொண்டு வந்து விட்டு களைப்பாக இருந்ததால் மேட்டுப்பாளையம் கல்லார் பகுதியில் உள்ள ராஜ்குமார் என்பவருக்கு சொந்தமான கல்லார் காட்டேஜில் தங்கி ஓய்வெடுத்து விட்டு செல்லலாம் என்று ரூம் புக் செய்துள்ளார்.

அப்போது அங்கிருந்து அவர் பெயர் விலாசம் கேட்டு தெரிந்து ராஜூ சுந்தர் என்பவர் புக்கிங் செய்து கொடுத்ததாகவும். அப்போது அவர் எங்க காட்டேஜில் ஜாலியாக இருக்க அழகான பெண்கள் என்றும் உள்ளே அழைத்து சென்றதாகவும் காட்டேஜில் மற்றொரு அறையில் இருந்த ராஜ்குமார் என்பவரிடம் அறிமுகப்படுத்தி உள்ளார்.

அவர் ரூபாய் 2000 கொடுத்தால் விதவிதமான பெண்களை வெளியில் இருந்து வரவழைத்து தருவதாக கூறியுள்ளார். இதைஅடுத்து சந்தோஷ் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் மேட்டுப்பாளையம் காவல் ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன் உதவி ஆய்வாளர் முருகநாதன் மற்றும் தனிப்பிரிவு காவலர்கள் கருப்புசாமி விக்னேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அங்கு இருந்த பெண் மற்றும் லாட்ஜின் உரிமையாளர் மேட்டுப்பாளையம் ஊட்டி ரோடு ரயில்வே கேட் பகுதியை சேர்ந்த பெரிய பாண்டி மகன் ராஜ்குமார் (வயது 38), மேட்டுப்பாளையம் கல்லார் ரயில்வே கேட் பகுதியைச் சேர்ந்த ராமதாஸ் மகன் ராஜ் சுந்தர் (வயது 31) ஆகிய மூன்று பேரையும் கைது செய்து மேட்டுப்பாளையம் குற்றவியல் நீதித்துறை நடுவர் முன்பு ஆஜர் செய்தனர். நீதிபதி ராஜ்குமார் மற்றும் ராஜ் சுந்தரை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

இதை அடுத்து இருவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண்ணை கோவை பெண்கள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

வீட்டு சுவர் ஏறி விசாரணை நடத்திய போலீஸ் : சரமாரிக் கேள்வி கேட்ட பெண்… ஷாக் வீடியோ!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ‌ ராஜலட்சுமி…

18 hours ago

எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?

நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…

19 hours ago

கமல்ஹாசனை புறக்கணித்த ஒன்றிய அரசு? அவர் இல்லாம சினிமா விழாவா? கொந்தளிக்கும் ரசிகர்கள்!

இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…

20 hours ago

பூஜா ஹெக்டே ராசியில்லாத நடிகையா? அப்போ ஜனநாயகன் கதி?

தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…

20 hours ago

கள்ளக்காதலியை பார்க்க கோவை வந்த ‘துபாய் காதல் மன்னன்’ : உல்லாசத்தால் உயிர் போன சோகம்!

கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…

21 hours ago

தவெக புகழ் பாடும் டூரிஸ்ட் ஃபேமிலி? போகிற போக்கில் ஆதரவை தூவிவிட்ட இயக்குனர்?

அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…

21 hours ago

This website uses cookies.