எந்த பொண்ணு வேணும்? ரகம் ரகமா இருக்கு.. களைகட்டிய விபச்சாரம்.. புரோக்கருடன் சிக்கிய 4 பேர்!
திருப்பூர் பின்னலாடைக்கு பிரசித்தி பெற்ற நகரம் ஆகும். இங்கு தமிழகத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமல்லாமல் வட மாநிலத்தவர்களை சார்ந்தவர்களும் என சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பின்னலாடை தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் வட மாநிலத்தில் இருந்து பின்னலாடை நிறுவனத்திற்கு வேலைக்காக வருபவர்களை குறிவைத்து திருப்பூரில் பல்வேறு இடங்களில் விபச்சாரம் நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் வந்தது.
இதனை தொடர்ந்து மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் அபினபு உத்தரவின் பேரில் காவல்துறையினர் சந்தேகத்திற்கு இடமான இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.
இதில் திருப்பூர் தெற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான பழைய பேருந்து நிலையத்திற்கு பின்புறம் உள்ள காமாட்சி அம்மன் திருமண மண்டபம் அருகில் பெண்களை வைத்து விபச்சாரத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.
அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் வீட்டில் சோதனை செய்த பொழுது அந்த வீட்டில் வட மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணும் தமிழகத்தைச் சேர்ந்த மற்றொரு பெண்ணும் விபச்சாரத்தில் ஈடுபடுத்த பட்டதாக தெரியவந்தது.
தொடர்ந்து வீட்டில் வைத்து விபச்சார தொழிலில் ஈடுபட்ட மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த சாரோகான் என்பவரும் வாடிக்கையாளர்களாக சென்ற இளங்கோ,உதயகுமார்,முருகேசன் ஆகிய நான்கு பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
மேலும் இரண்டு பெண்களையும் காவல்துறையினர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதில் பின்னலாடை நிறுவனத்திற்கு வட மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவரும் தமிழகத்தைச் சேர்ந்த பெண் ஒருவரும் வந்தது தெரிய வந்தது.
மேலும் இரு பெண்களும் கூறுகையில் பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றுவதற்காக வந்ததாகவும் சாரூக்ஹான் என்பவர் இதனை பயன்படுத்திக் கொண்டு தங்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாகவும் கூறினர்.
தொடர்ந்து விபச்சார புரோக்கர் மற்றும் வாடிக்கையாளர்கள் உட்பட நான்கு பேரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட பெண்கள் இருவரையும் காவல்துறையினர் காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.
விஜய் டிவியில் கலகலப்பான தொகுப்பாளராக வலம் வந்தவர் பிரியங்கா தேஷ்பாண்டே. ஆரம்பத்தில ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய இவர்,…
கணவருடன் ஏற்பட்ட பிரச்னையால் கயல் சீரியல் நடிகை தற்கொலைக்கு முயன்றதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சன் டிவியில் பிரைம்…
சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நேற்று உலகம் முழுவதும் வெளியான படம் ரெட்ரோ. சூர்யாவின் கங்குவா படத்திற்கு பிறகு…
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
This website uses cookies.