ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி காரல் மார்க்ஸ் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு கண்டனங்கள் எழுந்தன. பல்வேறு அரசியல் தலைவர்களும் ஆளுநரின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில் நீலகிரியில் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு சென்னை செல்ல கோவை விமான நிலையம் வந்தார்.
அப்போது, ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் விமான நிலைய நுழைவாயில் முன்பு கைகளில் கருப்பு கொடி ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதை அடுத்து அங்கு கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சந்தீஸ் தலைமையிலான போலீஸார் குவிக்கப்பட்டனர். பின்னர் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தை கைவிட மறுத்த நிலையில் போலீசார் 50 மேற்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை கைது செய்து வேனில் ஏற்றினர்.
இதனால் கோவை விமான நிலையம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து விமான நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.