திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே தடையை மீறி தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி அமைப்பினரை காவல்துறையினர் கைது செய்தனர்
இந்து கலை இலக்கிய முன்னணி மாநில செயலாளர் கனல் கண்ணன் பெரியார் குறித்து அவதூறாக பேசியதாக தமிழக காவல்துறையால் கைது செய்யப்பட்டு இருந்தார். இந்த கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து இந்து முன்னணி சார்பில் மாநில தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே தடையை மீறி தமிழக அரசுக்கு எதிராக இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வர சுப்ரமணியம் தலைமையில் நூற்றுக்கு மேற்பட்ட இந்து முன்னணி அமைப்பினர் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வர சுப்ரமணியம் உள்ளிட்ட ஏராளமானவரை காவல் துறையினர் கைது செய்தனர் .
அப்போது செய்தியாளர்களை சந்தித்த இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வர சுப்ரமணியம், கனல் கண்ணனின் கருத்தை இந்து முன்னணி வரவேற்பதாகவும் அவர் கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதோடு அவரை உடனடியாக விடுதலை செய்யவில்லை என்றால் இந்து முன்னணி மிகப்பெரிய அளவில் போராட்டத்தை முன்னெடுக்கும் என தெரிவித்தார்.
ஆர்யாவுக்குச் செந்தமான உணவகங்கள் தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளாக கதாநாயகனாக வலம் வருபவர் ஆர்யா. தொடக்கத்தில் பல திரைப்படங்கள் அவரது…
நடிகர் ஆர்யா ஒளிப்பதிவாளர் ஜீவா இயக்கத்தில் வெளியான உள்ளம் கேட்குமே படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். என்னதான் அந்த படத்தில்…
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
This website uses cookies.