Categories: தமிழகம்

இந்தக் காடு எங்க காடு : திம்பம் மலைப்பாதையில் இரவு நேர போக்குவரத்து தடை விதிப்புக்கு எதிர்ப்பு.. மறியலால் பரபரப்பு!!

ஈரோடு : திம்பம் மலைப்பாதையில் இரவுநேர போக்குவரத்து தடையை நீக்கக்கோரி புளிஞ்சூர் சோதனைச் சாவடியில் சாம்ராஜ்நகர் மாவட்ட விவசாயிகள் மற்றும் லாரி உரிமையாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதை தமிழகம் மற்றும் கர்நாடகா மாநிலங்களை இணைக்கும் முக்கியச் சாலையாக விளங்குகிறது. இந்த மலைப்பாதை வழியாக தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு இடையே 24 மணி நேரமும் சரக்கு மற்றும் வாகன போக்குவரத்து நடைபெறும் வழக்கம்.

குறிப்பாக இரவு நேரங்களில் தாளவாடி மலைப்பகுதியில் இருந்து அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள் மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிக்கு கொண்டு செல்வது வழக்கம்.

1455 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதியில் அரியவகை மான்கள், யானை, சிறுத்தை, புலி, காட்டெருமை, செந்நாய் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

குறிப்பாக புலிகள் வாழ்வதற்கு ஏற்ற தட்பவெப்ப சூழ்நிலை இங்கு நிலவுவதால் கடந்த 2013 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தமிழ்நாட்டின் நான்காவது புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டது.

இந்த புலிகள் காப்பகத்தின் வழியாக சத்தியமங்கலத்தில் இருந்து ஆசனூர் வழியாக திண்டுக்கல் மைசூர் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த வனப்பகுதியில் வசிக்கும் மான், யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் உணவு மற்றும் நீர் தேடி வனப்பகுதியை விட்டு வெளியேறி சாலையைக் கடக்கும் பொழுது அவ்வப்போது நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களில் எதிர்பாராதவிதமாக அடிபட்டு உயிரிழந்து வருகின்றன.

இதன் காரணமாக சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வசிக்கும் வனவிலங்குகளை பாதுகாக்கும் நோக்கத்துடன் திம்பம் மலைப்பாதை வழியாக செல்லும் வாகனங்களுக்கு மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை நடைபெறும் இரவு நேர போக்குவரத்து தடை செய்ய வேண்டும் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் உத்தரவை அமல்படுத்த வேண்டுமென கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், வழக்கின் தொடர்பாக மக்களின் கருத்துக்களைக் கேட்டு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என வனத்துறையினர் மற்றும் பொதுப்பணித் துறையினருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் 2019ஆம் ஆண்டு தொடுத்த வழக்கின் படி ஈரோடு மாவட்ட ஆட்சியர் உத்தரவை இன்று முதல் அமல்படுத்த வேண்டுமென சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த வாகன உரிமையாளர்கள், விவசாயிகள் மற்றும் தாளவாடியில் உள்ள மொத்தமாக காய்கறி விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் கூறுகையில் வனவிலங்கு பாதுகாப்பு என்ற ஒன்றை மட்டும் கருத்தில் கொள்ளாமல் இரண்டு மாநிலங்களைச் சேர்ந்த பல விவசாயிகளின் வாழ்வாதாரம் குறித்து பார்க்க வேண்டும் எனவும் திம்பம் மலைப்பாதை வழியாக இரவு நேர போக்குவரத்து தடை விதிக்கப்பட்டால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.

திம்பம் மலைப்பாதை வழியாக இரவு நேர போக்குவரத்து தடை செய்ய கூடாது என அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சுமார் 1500 க்கும் மேற்பட்ட வாகன உரிமையாளர்கள், விவசாயிகள், மொத்த காய்கறி விற்பனையாளர்கள் என அனைவரும் இன்று ஒன்றுகூடி பண்ணாரி சோதனை சாவடியில் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தாளவாடி மலை கிராமத்தில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு உள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

தேசிய விருது இயக்குனரின் படம் ட்ராப்? திருப்தியே இல்லாமல் அலையும் விக்ரம்! அப்படி என்னதான் பிரச்சனை?

தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…

13 hours ago

வெற்றிமாறன் படத்தில் இயக்குனர் நெல்சன் இடம்பெற்றதன் பின்னணி இதுதான்? சீக்ரெட்டை உடைத்த பிரபலம்!

கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…

14 hours ago

திமுக கூட்டணியில் விழுந்த ஓட்டை… திருமாவை சந்தித்தது குறித்து வைகைச் செல்வன் டுவிஸ்ட்!

பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…

14 hours ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம் படிக்க உதவிக்கரம்.. கனவை நனவாக்கும் ஷாலோம் எஜூகேஷன்.!

மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…

15 hours ago

வற்புறுத்தி முத்தக்காட்சியில் நடிக்க வச்சாங்க, ஆனா?- மனம் நொந்துப்போய் பேசிய மதுபாலா!

தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…

15 hours ago

அடுத்தடுத்து பாமக எம்எல்ஏக்களுக்கு நெஞ்சுவலி.. பின்னணியின் ‘பலே’ பிளான்?!

பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…

16 hours ago

This website uses cookies.