தோக்கமூர் ஊராட்சியில் அரசு இடத்தில் உள்ள தீண்டாமை சுவரை இடிப்பது தொடர்பான பேச்சுவார்த்தையில் சமரசம் எட்டியது.
திருவள்ளூர் மாவட்டம் தோக்கமூர் கிராமத்தை சேர்ந்த இரு தரப்பு மக்களிடம் பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதில், குடியிருப்புகளை சுற்றி அமைக்கப்பட்டுள்ள தீண்டாமை சுவர் அகற்றபடவேண்டும், அரசு இடத்தை தனி நபர்கள் ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது, வேலி அமைக்க கூடாது என கோட்டாட்சியர் காயத்ரி தெரிவித்ததை தொடர்ந்து, இரு தரப்பும் ஏற்று பேச்சுவார்த்தை உடன்பாட்டை எட்டியது.
விரைவில் தீண்டாமை சுவரை இடிக்கும் பணிகள் வருவாய்த்துறை மூலம் நடைபெறும் என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.
தீண்டாமை சுவர் மற்றும் வேலி தற்காலிகமாக அமைக்கப்படுவதால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக கூறி பட்டியலின மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்த நிலையில், தற்போது பிரச்சினை கோட்டாட்சியரின் அமைதி பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.