Categories: தமிழகம்

‘கடற்கரைகளில் யாராவது மது அருந்தினால் தகவல் கொடுங்க’: புதுச்சேரி காவல்துறை அதிகாரி மீனவர்களுக்கு வேண்டுகோள்..!!

புதுச்சேரி: கடற்கரைகளில் மது அருந்தினால் உடனடியாக காவல் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கும் படி காவல் துறை – மீனவ பிரதிநிதிகள் இடையே நடைபெற்ற நல்லுறவு கூட்டத்தில் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் கேட்டு கொண்டார்.

புதுச்சேரி முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் காவல் துறையினர்-மீனவ பிரதிநிதிகள் நல்லுறவு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு (பொறுப்பு) முதுநிலை காவல் கண்காணிப்பாளர் தீபிகா தலைமை தாங்கினார். இதில் ஆய்வாளர் கார்த்திகேயன், சார்பு ஆய்வாளர்கள் சிவபிரகாசம், முருகன், ஜான் பிரேரா ஆகியோரும், புதுச்சேரி கிழக்கு காவல் சரகத்திற்க்கு உட்பட்ட மினவ கிராமங்களான குருசுக்குப்பம், சோலைநகர், வைத்திக்குப்பம், கனகசெட்டிக்குளம், பிள்ளைச்சாவடி, காலாப்பட்டு, பெரிய காலாப்பட்டு, சின்னகாலாப்பட்டு ஆகிய மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவ பிரதிநதிகள் 50 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் பேசிய முதுநிலை காவல் கண்காணிப்பாளர் தீபிகா, மீனவ கிராமங்களில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டால் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையங்களில் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். மீனவ கிராமங்களில் உள்ளூர் பஞ்சாயத்துக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும். அதேபோல் கடலோர பகுதிகளில் மது அருந்தக்கூடாது, யாராவது மது அருந்தினாலும், கடலோரங்களில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் நடமாட்டம் இருந்தாலோ உடனடியாக அருகே உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்க வேண்டும் எனவும் தகவல் தெரிவிப்பவர்கள் விவரம் ரகசியம் காக்கப்படும் என்றார்.

மேலும் மீனவ பிரதிநிதிகளும் தங்களுக்கு ஏற்ப்பட்டும் சில பிரச்சினைகள் குறித்தும் இந்த கூட்டத்தில் போலீசாரிடம் தெரிவித்தனர்.

UpdateNews360 Rajesh

Recent Posts

ஒரு செங்கலைக் கூட இன்னும் எடுத்து வைக்கவில்லை.. திமுக பாணியை கையில் எடுத்த அண்ணாமலை!

மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…

6 seconds ago

சந்தானம் போட்ட கண்டிஷனால் கடுப்பான சிம்பு? STR 49 படம் கைமாறியதற்கு காரணம் இதுதானா?

STR 49  “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…

39 minutes ago

தனிமனிதனை வேட்டையாடுவதால் வரலாறை மாற்ற முடியாது : கீழடி அமர்நாத் மாற்றம்.. சு.வெங்கடேசன் கண்டனம்!

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…

40 minutes ago

கொரேனா பரவல்.. தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கா? உண்மை இதுதான்!

கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…

1 hour ago

தக் லைஃப் தோல்வியால் சிம்புவுக்கு வந்த பிரச்சினை? கடைசில இப்படி ஆகிடுச்சே!

சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…

2 hours ago

மக்களை ஏமாற்ற ரோடு ஷோ நடத்துகிறார்.. முதலமைச்சருக்கு எதுவும் தெரியல : அன்புமணி குற்றச்சாட்டு!

வேலூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்ட பொதுகுழு கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இதில் மாவட்டத்தலைவர் வெங்கடேசன்,…

3 hours ago

This website uses cookies.