குருந்துடைய அய்யனார் கோவில் சந்தன காப்பு உற்சவத்தை முன்னிட்டு 42-வது ஆண்டு மாட்டுவண்டி எல்கைப் பந்தயம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் .
அறந்தாங்கி அருகே இடையார் கிராமத்தில் உள்ள குருந்துடைய அய்யனார் கோவில் சந்தன காப்பு உற்சவத்தை முன்னிட்டு 42 -வது ஆண்டு மாட்டுவண்டி எல்கைப் பந்தயம் நடைபெற்றது.பந்தயத்தில் பெரியமாடு, நடுமாடு,கரிச்சான் மாடு, பூஞ்சிட்டு மாடு,தேன்சிட்டு மாடு என 5 பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில் திருச்சி, மதுரை, தஞ்சை, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட 140 க்கும் மேற்பட்ட இரட்டை மாட்டு வண்டிகள் போட்டியில் கலந்து கொண்டன.
போட்டியில் கலந்து கொண்டு ஒவ்வொரு பிரிவு போட்டியிலும் முதல் மூன்று இடங்களை பிடித்து வெற்றி பெற்ற மாட்டுவண்டி உரிமையாளர்களுக்கு ரூ.3,98,000 ரொக்கப்பரிசும், கோப்கைகளும் வழங்கப்பட்டது.பந்தயத்தை சாலையின் இருபுறமும் நின்று ரசிகர்கள் பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.அறந்தாங்கி காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.