புதுக்கோட்டையில் நர்சிங் மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அடுத்த ஒரு கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் நர்சிங் படித்து வந்து உள்ளார். இந்த நிலையில், இப்பெண் கடந்த டிசம்பர் 25ஆம் தேதி காணவில்லை என பெற்றோர், வடகாடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்த நிலையில், காணாமல் போன இளம்பெண், அந்த கிராமத்தில் உள்ள ஒரு கிணற்றில் சடலமாகக் கிடந்து உள்ளார். பின்னர் இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், இளம்பெண்ணின் சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால், இந்த விவகாரம் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லையென்றால், நாங்கள் சடலத்தை வாங்க மாட்டோம் என பெற்றோர் மற்றும் உறவினர்கள் கூறி உள்ளனர். மேலும், இது குறித்து பெற்றோர் கூறுகையில், “கடந்த 25ஆம் தேதி அன்று, நாங்கள் துக்க நிகழ்வு ஒன்றிற்காக வெளியில் சென்றுவிட்டோம்.
பின்னர், போனில் எனது மகளைத் தொடர்புகொண்டோம். அப்போது, நானும், தம்பியும் தக்காளிச் சோறு சமைத்து சாப்பிட்டதாக எனது மகள் கூறினார். பின்னர், சிறுது நேரம் கழித்து, அப்பா உனக்கு நூடுல்ஸ் வாங்கி அனுப்புகிறார், வாங்கிக்கொள் எனக் கூறினோம். அதற்கு அவள், சரி என்றாள்.
இதையும் படிங்க: நடிகர் விவேக்கிற்கு பிறந்த இரட்டை குழந்தைகள்.. வெகு நாள் கழித்து வெளியான உண்மை!
பின்னர், கடைசியாக இரவு 7 மணிக்கு பேசினோம். இதனையடுத்து, சிறிது நேரத்தில் கால் செய்த போது, அவர் போனை எடுக்கவில்லை. எனவே, 8 மணிக்கு வந்து பார்த்தபோது, எனது மகளை வீட்டில் காணவில்லை. இரவு முழுவதும் தேடி, மறுநாள் (டிச.26) வடகாடு காவல் நிலையத்தில் புகாரளித்தோம்” எனத் தெரிவித்தனர்.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.