புதுக்கோட்டையில் நர்சிங் மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அடுத்த ஒரு கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் நர்சிங் படித்து வந்து உள்ளார். இந்த நிலையில், இப்பெண் கடந்த டிசம்பர் 25ஆம் தேதி காணவில்லை என பெற்றோர், வடகாடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்த நிலையில், காணாமல் போன இளம்பெண், அந்த கிராமத்தில் உள்ள ஒரு கிணற்றில் சடலமாகக் கிடந்து உள்ளார். பின்னர் இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், இளம்பெண்ணின் சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால், இந்த விவகாரம் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லையென்றால், நாங்கள் சடலத்தை வாங்க மாட்டோம் என பெற்றோர் மற்றும் உறவினர்கள் கூறி உள்ளனர். மேலும், இது குறித்து பெற்றோர் கூறுகையில், “கடந்த 25ஆம் தேதி அன்று, நாங்கள் துக்க நிகழ்வு ஒன்றிற்காக வெளியில் சென்றுவிட்டோம்.
பின்னர், போனில் எனது மகளைத் தொடர்புகொண்டோம். அப்போது, நானும், தம்பியும் தக்காளிச் சோறு சமைத்து சாப்பிட்டதாக எனது மகள் கூறினார். பின்னர், சிறுது நேரம் கழித்து, அப்பா உனக்கு நூடுல்ஸ் வாங்கி அனுப்புகிறார், வாங்கிக்கொள் எனக் கூறினோம். அதற்கு அவள், சரி என்றாள்.
இதையும் படிங்க: நடிகர் விவேக்கிற்கு பிறந்த இரட்டை குழந்தைகள்.. வெகு நாள் கழித்து வெளியான உண்மை!
பின்னர், கடைசியாக இரவு 7 மணிக்கு பேசினோம். இதனையடுத்து, சிறிது நேரத்தில் கால் செய்த போது, அவர் போனை எடுக்கவில்லை. எனவே, 8 மணிக்கு வந்து பார்த்தபோது, எனது மகளை வீட்டில் காணவில்லை. இரவு முழுவதும் தேடி, மறுநாள் (டிச.26) வடகாடு காவல் நிலையத்தில் புகாரளித்தோம்” எனத் தெரிவித்தனர்.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.