Categories: தமிழகம்

“மாநகராட்சி வேண்டாம் என்று ஒன்று திரண்ட மக்கள்-பாடம் எடுத்த மாவட்ட ஆட்சியர்!”

சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்தினால் அது சட்டம் ஒழுங்கு பிரச்சனையாக தான் பார்க்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்…. மாவட்ட ஆட்சியர் வேண்டா மாநகராட்சி குழுவுக்கு எச்சரிக்கை!

தமிழக அரசு புதுக்கோட்டை நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தியதோடு 11 ஊராட்சிகளை இணைத்து மாநகராட்சி உருவாக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. இன்னும் 20 தினங்களுக்குள் புதுக்கோட்டை மாநகராட்சி செயல்பட தொடங்கும் என்று நேற்று சட்டமன்றத்தில் அமைச்சர் நேரு தெரிவித்துள்ளார். இந்த நிலையில் மாநகராட்சியோடு தங்களது ஊராட்சிகளை இணைத்தால் 100 நாள் வேலை திட்டம் பறிபோகும், வரி உயரும் அபாயம் உள்ளது என்று கூறி பலகட்ட போராட்டங்களை 11 ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மேலும் வேண்டாம் மாநகராட்சி என்ற 2 குழுவை அமைத்து அதில் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று சட்டமன்றத்தில் அமைச்சர் அறிவித்ததை தொடர்ந்து அதிருப்தி அடைந்த பொதுமக்கள் இன்று காலை 500 க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதோடு அவர்கள் அனைவரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழைந்து ஆட்சியர் அலுவலக வராண்டாவில் அமர்ந்தனர்.இதனை தொடர்ந்து இரண்டாம் மாநகராட்சி குழு மற்றும் 11 ஊராட்சி தலைவர்களிடம் மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது தங்களது ஊராட்சிகளை மாநகராட்சியோடு இணைக்க கூடாது என்ற கோரிக்கையை வைத்தனர்.அதற்கு பதில் அளித்து பேசிய ஆட்சியர் உங்களுடைய கருத்துக்களை ஏற்கனவே அரசுக்கு தெரியபடுத்தி விட்டோம். மீண்டும் இன்று உங்களுடைய கோரிக்கைகளை அரசிற்கு நாங்கள் தெரிவிக்கிறோம். மாநகராட்சியோடு ஊராட்சி இணைந்தால் 100 நாள் வேலைத்திட்டம் பறிபோகும் என்ற கருத்து தவறானது.

நகராட்சிக்கு என்று தனி வேலை திட்டம் உள்ளது.அதில் பயனாளிகளுக்கு பணி கொடுக்கப்படும். மாநகராட்சியோடு இணைத்தால் வேலை வாய்ப்புகள் வளரும் சூழ்நிலை ஏற்படும். எனவேதான் மாநகராட்சியோடு ஊராட்சிகள் இணைக்கப்பட உள்ளது. இருப்பினும் உங்களுடைய கருத்துக்களை, எண்ணங்களை அரசுக்கு நாங்கள் எடுத்துரைக்கிறோம் என்று கூறியதோடு அதே நேரத்தில் இந்த விஷயத்தில் அரசியல் செய்ய வேண்டாம்.அரசியல் செய்து சட்டம் ஒழுங்கு பிரச்சனையை உருவாக்கினால் அது கண்டிப்பாக சட்டம் ஒழுங்கு பிரச்சினையாக தான் பார்க்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் மெர்சி ரம்யா அவர்களிடம் உறுதி கூறினார்.
இதன் பின்னர் பொதுமக்களிடமிருந்து தாசில்தார் தலைமையில் அரசு அதிகாரிகள் மனுக்களை பெற்றுக் கொண்டனர்.500 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Sangavi D

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.