தமிழகம்

வினோத பறவைகளால் ரூ.40,000 வரை நஷ்டம்.. குமுறும் புதுக்கோட்டை விவசாயிகள்.. அரசு நடவடிக்கை எடுக்குமா?

புதுக்கோட்டை, தாணிக்காடு கிராமத்தில் வரும் வினோத பறவைகளால் ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாய் வரையில் நஷ்டம் ஏற்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆவுடையார் கோவில் தாலுகா மதகம் ஊராட்சியில் உள்ளது தாணிக்காடு என்ற கிராமம். இந்த கிராமத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு சுமார் 180 ஏக்கருக்கும் மேலான இடத்தில் நெல் விவசாயம் நடைபெற்று வருகிறது.

மேலும், இந்தப் பகுதியில் உள்ள நெல் விவசாயமானது, பருவ மழையை நம்பியே பயிரிடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்தப் பகுதிக்கு சரியாக நெற்கதிர்கள் விளையும் நேரத்தில், கடந்த மூன்று ஆண்டுகளாக வினோத பறவைகள் ஒன்று வருவதாகவும், அவ்வாறு வருகை தரும் பறவைகள் வயல்களில் நெற்கதிர்கள் துவங்கும் நேரத்தில், அதன் அடிப்பகுதிக்குச் சென்று வேருடன் பிடுங்குவதாகவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

அது மட்டுமல்லாது, அதில் வரும் குருத்துகளை சாப்பிட்டு விட்டு, அந்த கதிர்களைக் கொண்டு கூண்டு அமைப்பதாகவும், அவ்வாறு அமைக்கப்படும் கூட்டில் தங்கும் பறவைகள், முட்டையிட்டு குஞ்சு பொரித்து தங்கள் இனத்தை விருத்தி செய்து வருவதாகவும் அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: அண்ணாமலை பைல்ஸ் 1.. DMK Files 3-க்கு பதில்? திருச்சி சூர்யா பரபரப்பு பதிவு!

மேலும், இந்த நிகழ்வு கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருவதால், ஒரு ஏக்கருக்கு சுமார் 30 முதல் 40 மூட்டைகள் வரை நெற்பயிர்கள் விளைந்து வந்த நிலையில், இந்த அரிய வகை பறவையின் தாக்குதலால், ஏக்கருக்கு 5 மூட்டை அளவு தான் நெல் கிடைப்பதாகவும், இதனால் தங்களுக்கு ஏக்கருக்கு சுமார் 40 ஆயிரம் ரூபாய் வரையில் நஷ்டம் ஏற்படுவதாகவும் கவலையுடன் தெரிவித்தனர்.

அது மட்டுமல்லாது, இந்த அரிய வகை பறவை இனத்தை அடையாளம் கண்டு, அதனைத் தடுத்து நிறுத்த வனத்துறை மற்றும் வேளாண்மைத் துறையினருக்கு புகார் அளித்ததாகவும், ஆனால் புகார் குறித்து இதுவரை எந்த நடவடிக்கையும் ஏற்படவில்லை என்றும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில், தங்களின் வாழ்வாதாரமான விவசாயத்தைக் காக்க அரசு அதிகாரிகள் பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், அவ்வாறு வழங்க முன்வரவில்லை என்றால், அப்பகுதியில் விவசாயிகளை ஒன்று திரட்டி மிகப்பெரிய அளவில் போராட்டங்களை நடத்துவோம் என்றும் அப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனர்.

Hariharasudhan R

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.