புதுக்கோட்டையில் திருமண விழாவில் பாரம்பரியத்தை காக்கும் வகையில் நடந்த நாட்டு மாடு கண்காட்சி பார்ப்போரை நெகிழச் செய்தது.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் சிவகங்கை மாவட்டம் பொன்னடபட்டியை சேர்ந்த பொறியாளர் சரவணன் – சரண்யா தம்பதியருக்கு திருமணம் நடைபெற்றது. இவ்விழாவில் பாரம்பரியம் மிக்க நாட்டு மாடுகள் இடம்பெற்ற கால்நடை கண்காட்சி நடைபெற்றது.
இக்கண்காட்சியில் நாட்டுமாடு வகைகளான புளிகுளம் காளை, காங்கேயம் காளை, குரால், செவலை என ஜல்லிகட்டு காளைகளும், ரேக்ளா ரேஸ் காளை, சண்டை கிடாய், வண்டி மாட்டு வகைகள் இடம்பெற்றது. திருமண விழாவிற்கு வந்தவர்களை கவர்ந்தது.
திருமண விழாவிற்கு வந்தவர்களை வரவேற்க வைக்கப்பட்ட பிளக்ஸ் பேனரில் மாப்பிள்ளை பெண் புகைப்படம் இடம்பெறாது, தங்களின் வளர்ப்பு ஜல்லிக்கட்டு காளை புகைப்பட மட்டும் இடம்பெறும் வகையில் பிளக்ஸ் போர்டு வைத்திருந்தது காண்பவரை வெகுவாக கவர்ந்தது.
மேலும், திருமணத்திற்கு வந்தவர்கள் காளைகளுடன் ஆர்வமாக புகைப்படம் எடுத்துச் சென்றனர்.
பிரஜீன் சன் மியூசிக்கில் தொகுப்பாளராக தனது கெரியரை தொடங்கியவர் பிரஜின். அதன் பின் இவர் பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்திருந்தாலும்…
ஐஸ்வர்யா ரகுபதி தமிழில் மிகவும் பிரபலமான தொகுப்பாளினிகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் ஐஸ்வர்யா ரகுபதி. இவர் தொகுப்பாளினி மட்டுமல்லாது நடிகையும்…
பாகிஸ்தானுக்கு ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி பதிலடி கொடுத்துள்ளது. இதற்கு உலகமே இந்தியாவை பாராட்டி…
விஜய்க்கு ஒன்னும் தெரியாது தவெக தலைவராக பரிணமித்திருக்கும் விஜய் வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளவுள்ளார். தனது…
சிவகாசியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் 71வது பிறந்தநாள் விழாவை கொண்டாடுவது குறித்த அதிமுக நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.…
கிரிக்கெட்டின் தல கிரிக்கெட் ரசிகர்களால் தல என அழைக்கப்படுபவர் தோனி. இவர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக திகழ்ந்தவர்…
This website uses cookies.