Categories: தமிழகம்

‘அதுக்குள்ள என்ன அவசரம்… குற்றவாளி எங்கே..?’ சமத்துவ பொங்கல் வைக்க வந்த அமைச்சர்களுக்கு வேங்கைவயல் மக்கள் எதிர்ப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் எங்கேயும் இரட்டை குவளை முறை இல்லை ஒரு சில நபர்கள் இதுபோன்ற சம்பவத்தை இருப்பதாக கூறி திசை திருப்புவதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கை வயல் கிராமத்தில் கடந்த மாதம் 22ஆம் தேதி ஆதிதிராவிட குடியிருப்பு பகுதியில் உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மனிதக் கழிவுகள் கலந்தது தொடர்பாக காவல்துறை விசாரணை செய்து வந்தது இந்த நிலையில் கண்டுபிடிக்க முடியாததால் இந்த வழக்கை தமிழக டிஜிபி சைலேந்திரபாபு சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார்.

சிபிசிஐடி போலீசார் இன்று இது தொடர்பாக மீண்டும் ஒரு வழக்கை பதிவு செய்துள்ளது
35 சி பி சி டி போலீசார் தலைமையில் 10 குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது

இந்த நிலையில் வேங்கவேல் கிராமத்தில் அனைத்து சமூகத்தினரும் ஒற்றுமையாக உள்ளார்கள் என்பதை பறைசாற்றும் வகையில் சமத்துவ பொங்கல் இன்று கொண்டாடப்பட்டது. அமைச்சர்கள் ரகுபதி, மெய்ய நாதன், கயல்விழி செல்வராஜ் ஆகியோர் வந்து சமத்துவ பொங்கல் மக்களுக்கு வழங்கினர்.

முன்னதாக, கோயிலில் மூன்று தரப்பினரும் வழிபடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் ஒரு சமூக மக்கள் இதனை புறக்கணித்துள்ளனர். இதனால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, அமைச்சர்கள் மற்றும் பொதுமக்கள் அய்யனார் கோவில் வழிபட்டு சென்றனர்.

அப்போது, உண்மையான குற்றவாளியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் அமைச்சர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து, காவல்துறையினர் அவர்களை சமாதானப்படுத்தி அழைத்துச் சென்றனர்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கை வயல் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள். அதற்காகத்தான் தமிழக அரசு சிபிசிஐடி வசம் இந்த வழக்கை ஒப்படைத்துள்ளது. தற்போது இந்த கிராமத்தில் அனைத்து மக்களும் ஒற்றுமையாக தான் உள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் எங்கேயும் இரட்டை குவளை முறை இல்லை. ஒரு சில நபர்கள் இதுபோன்ற சம்பவத்தை இருப்பதாக கூறி திசை திருப்புகின்றனர். தமிழக அரசு மெத்தனமாக இந்த வழக்கில் இருக்கவில்லை. உண்மையான குற்றவாளி கண்டுபிடிக்க வேண்டும் என்பதற்காக தான் இந்த வழக்கு மாற்றப்பட்டுள்ளது.

உரிய குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள். அனைத்து சமூகத்தினரையும் உள்ளடக்கி தான் முதல்வர் தலைமையில் திராவிட மாடல அரசு செயல்பட்டு வருகிறது, என்றார்.

Babu Lakshmanan

Babu Lakshmanan, is Sub Editor at Updatenews360.com. With a keen eye for detail and a commitment to journalistic integrity, Babu serves as the Sub Editor at Updatenews360.com. Bringing years of experience in the media industry, he specializes in refining news stories to ensure clarity, accuracy, and engagement. Babu's passion for unearthing the truth and presenting it in an accessible manner drives his daily editorial decisions. His background in journalism, coupled with a deep interest in social issues and technological advancements, contributes to his unique editorial perspective. Off the clock, Babu is an avid reader and a cultural enthusiast, constantly exploring new horizons that enrich his professional and personal life. His dedication to impactful journalism makes him a vital part of the Updatenews360 team, where he continues to uphold the standards of reliable and responsible news reporting.

Recent Posts

படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!

ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…

1 day ago

திருமணமானவுடன் சரக்கு பார்ட்டி… பிரியங்காவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…

1 day ago

தலைக்கேறிய மது போதையில் உளறிய குட் பேட் அக்லி நாயகி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…

1 day ago

குக் வித் கோமாளியில் சொல்வதெல்லாம் உண்மை? வெளிவந்தது போட்டியாளர்களின் பெயர்கள்!

தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…

1 day ago

தமன்னாவின் காதலை சிதைத்த சிவகுமார்? கார்த்தியை மிரட்டி கல்யாணம் செய்து வைத்த பகீர் சம்பவம்!

கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…

1 day ago

கனிமொழி எம்பி தேசவிரோதியா? பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சால் பரபரப்பு!

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…

1 day ago

This website uses cookies.