கோவை : அன்னூரில் பேருந்து படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணித்த மாணவர்களை இறக்கி விட்டு உறுதி மொழி ஏற்க வைத்து அன்னூர் போலீசார் அனுப்பிவைத்தனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்திலிருந்து கோவை நோக்கி வந்த தனியார் பேருந்து கோவை மாவட்டம் அன்னூர் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது, அந்த பேருந்தின் படிக்கட்டுக்களில் மாணவர்கள் உட்பட இளைஞர்கள் பயணித்து வந்துள்ளனர்.
இதைப்பார்த்த அன்னூர் ஆய்வாளர் நித்யா தலைமையிலான காவல்துறையினர், பேருந்தை நிறுத்தினர். படிக்கட்டுகளில் பயணம் மேற்கொள்ள அனுமதித்த, பேருந்தின் ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு தலா 600 ரூபாய் அபராதம் விதித்தனர்.
மேலும் படியில் தொங்கியபடி பயணித்த மாணவர்கள் உட்பட இளைஞர்களை கீழே இறக்கி அறிவுரை கூறிய காவல்துறை, பேருந்தில் படியில் தொங்கியபடி பயணிக்க மாட்டோம் எனவும், மீறி பயணித்தால் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்துவோம் எனவும் உறுதிமொழி ஏற்க செய்து எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
அன்னூரில் கோவை செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணித்து வருவதனால், அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதை கட்டுப்படுத்தும் முயற்சியாக அன்னூர் காவல்துறை இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.