விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே சாலை ஓரத்தில் ஏராளமான தள்ளுவண்டி உணவங்கள் செயல்பட்டு வந்தன. இதனால் போக்குவரத்து நெரிசலும் சாலை விபத்துகளும் அதிக அளவில் ஏற்பட்டன.
இதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா உத்தரவின்பேரில் தள்ளு வண்டியை சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்க கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டன.
தொடர்ந்து சாலை ஓரத்திலேயே தள்ளுவண்டி உணவுகள் செயல்பட்டு வந்ததால் இன்று அதிரடியாக விழுப்புரம் போக்குவரத்து ஆய்வாளர் வசந்த் தலைமையிலான போக்குவரத்து போலீசார் அதிரடியாக தள்ளு வண்டியை அப்புறப்படுத்த முயன்ற போது தள்ளு வண்டியை எடுக்க முடியாத அளவு சங்கிலி கொண்டு பூட்டி வைத்திருந்தனர்.
பின்னர் போக்குவரத்து உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் துறையினர் ஒரு சில தள்ளு வண்டிகளை தூக்கியவாரும் ஒரு சில தள்ளு வண்டிகளை தள்ளு தள்ளு என கூறியவாறு தள்ளி சென்று ஓரமாக விட்டனர்.
போக்குவரத்து போலீசார் தள்ளு வண்டியை தள்ளு தள்ளு என கூறி தள்ளு வண்டியை தள்ளி சென்று ஓரமாக விட்ட சம்பவம் சற்று சலசலப்பையும் நகைச்சுவையும் ஏற்படுத்தியது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.