திமுக ஆட்சியில் திரையுலகம் சுதந்திரமாக செயல்பட முடியாமல் அழிவு பாதையை நோக்கி செல்கின்றது என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த செய்தியாளர்களை சந்தித்த கடம்பூர் ராஜூ கூறுகையில், தமிழகத்தில் நடைபெறும் பிரச்சினைகளை பார்த்தால் இலங்கை-யை போல் மாறும் சூழ்நிலை உள்ளது. அப்படி மாறும்பட்சத்தில் திமுக ஆட்சி விரட்டியடிக்கப்படும் என்றார்.
அதிமுக-வின் கடந்த 5-ஆண்டு காலத்தில் சுதந்திரமாக சினிமா-துறை இயங்கி வந்தது. அதைபோல் அதிமுக ஆட்சியில் 2017-ல் இருந்து தொடர்ந்து ஆண்டுக்கு இரண்டு திரைப்படங்கள் கோவாவில் நடைபெற்ற இண்டெர்நேஷனல் சர்வதேச திரைப்படங்களுக்கு நிகராக தமிழ் திரைப்படங்கள் வெளியிடும் சூழ்நிலை இருந்தது.
அதைபோல் அதிமுக ஆட்சியில் திரைப்படத்துறை சர்வதேச அளவில் தரம் உயர்ந்து காணப்பட்டது. ஆனால் இன்று தமிழ் திரையுலகத்தின் தரம் ரெட் ஜெயன் மூவியை சுற்றி கண்படுகிறது.
திரையுலகத்தின் கதாநாயகன் சட்டமன்றத்தில் இருக்கின்றார் அவரது கட்டுபாட்டில் தான் சினிமாத் துறை உள்ளது என்று திரையுலகமே இன்று குற்றம்சாட்டுகின்றது. சினிமா துறைக்கென்று ஒரு அமைச்சர் இருப்பதாக தெரியவில்லை.
தமிழகத்தில் திமுக ஆட்சியில் திரைத்துறை அழிவு பாதையை நோக்கி செல்கின்றது என்று முன்னாள் செய்தி விளம்பரத்துறை கடம்பூர் ராஜூ குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.