விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் தமிழ்நாடு நாள் புகைப்பட கண்காட்சியை வெளிநாடு வாழ் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். பள்ளி மாணவ மாணவிகளுக்கான தமிழ்நாடு சிறப்புகள் பற்றிய பேச்சுப்போட்டி கட்டுரை போட்டிகளில் வென்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.
மேலும் தமிழ்நாடு நாள் குறித்த விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்த அமைச்சர் செஞ்சி மஸ்தான் இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்
அப்பொழுது பேசிய அவர், உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி அமலாக்கத்துறை விசாரணை தொடர்பான கேள்விக்கு அமைச்சர் செஞ்சி மஸ்தான், சட்டத்தை சட்ட ரீதியாக சந்திக்க எந்த காலத்திலும் பின் வாங்கியது இல்லை.
இதை கடந்த கால திமுக வரலாற்றில் பார்த்திருப்பீர்கள் அமைச்சர் பொன்முடி மீது ஏற்கனவே தொடரப்பட்ட வழக்கு குற்றம் நிரூபிக்கப்படாததால் விடுவிக்கப்பட்டார்.
அதேபோல் இதையும் நாங்கள் சட்ட ரீதியாக சந்திப்போம், விலைவாசி உயர்வு குறித்த கேள்விக்கு ஜிஎஸ்டி உள்ளிட்ட அனைத்து விலைவாசிகளையும் குறைக்க மோடி இடம் பேசி அண்ணாமலை நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.