தமிழகம்

துர்கா ஸ்டாலினை வைத்து அதிகாரத்தைப் பிடிக்க அமைச்சர் முடிவு? கொங்கு மண்டலத்தில் பரபரக்கும் அரசியல் களம்!

பழனியை தனி மாவட்டமாக உருவாக்கும் முனைப்பில் அமைச்சர் சக்கரபாணி இருப்பதாக வெளியான தகவலுக்கு, அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

கோயம்புத்தூர்: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனிக்கு அடிக்கடி வந்து முருகனை வழிபட்டுச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின். இவ்வாறு அவர் வரும்போதெல்லாம் அவரது வருகை குறித்தான ஏற்பாடுகளை முன்னின்று செய்பவர் அமைச்சர் அர.சக்கரபாணி.

எனவே, துர்கா ஸ்டாலின் மூலமாகவே பழனி தனி மாவட்ட கோரிக்கையை முடிக்க சக்கரபாணி காய் நகர்த்துவதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, பழனியை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் உருவாக்கப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதி அளித்தது. இதன்படி, பழனி, மடத்துக்குளம், உடுமலைப்பேட்டை, ஒட்டன்சத்திரம் ஆகிய தொகுதிகளை உள்ளடக்கி பழனியை தலைநகராகக் கொண்டு தனி மாவட்டம் அமைக்க அமைச்சர் சக்கரபாணி தொடர்ந்து மெனக்கெட்டு வருவதாகவும் அவரது நலம்விரும்பிகள் கூறுகின்றனர்.

மேலும், இது தொடர்பாக திருப்பூர் மாவட்ட மூத்த திமுக நிர்வாகிகள் பிரபல நாளிதழுக்கு அளித்த பேட்டியில், “திண்டுக்கல் மாவட்ட திமுகவில் மூத்த அமைச்சரான ஐ.பெரியசாமியும், அவரது மகன் செந்தில்குமாரும் அசைக்க முடியாக சக்தியாக உள்ளனர். எனவே, அவரை மீறி அங்கு சக்கரபாணியால் பெரிதாக செய்துவிடமுடியாது.

எனவே, பழனியை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டத்தை உருவாக்கினால் மாவட்ட அமைச்சராக, தான் மட்டுமே அதிகாரத்துடன் இருக்கலாம் என நினைக்கிறார் சக்கரபாணி. ஆனால், கொங்கு மண்டலத்தில் வரும் மடத்துக்குளத்தையும், உடுமலையையும் தென்மாவட்ட சாயலைக் கொண்ட பழனி, ஒட்டன்சத்திரம் தொகுதிகளையும் உள்ளடக்கி புதிய மாவட்டத்தை உருவாக்குவது சிக்கலை உருவாக்கும்” என்கின்றனர்.

மேலும், இது குறித்து அமைச்சர் சக்கரபாணி அளித்துள்ள தனி பேட்டியில், “பழனியை தலைநகராக கொண்டு தனி மாவட்டம் அமைப்பது என்பது முதலமைச்சரின் முடிவு. இது அரசின் கொள்கை முடிவாகக்கூட இருக்கலாம். புதிய மாவட்டம் அறிவிப்பு இந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரில் வெளியாகுமா என்றெல்லாம் எனக்குத் தெரியாது.பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிக்கு என்னைப் பொறுப்பாளராக முதலமைச்சர் நியமித்தார்.

இதையும் படிங்க: கள்ளக்காதலனுடன் உல்லாசம்.. எட்டிப் பார்த்த சிறுமிக்கு நடந்த கொடூரம் : 7 வருடங்களுக்கு பின் சிக்கிய தம்பதி!

எனவே, ஈஸ்வரசாமியை வெற்றி பெற வைத்தோம். மாவட்டப் பிரிவினை தொடர்பாக நான் எந்த முனைப்பும் காட்டவில்லை. பலரும் பல விதமான யூகங்களைச் சொல்லத்தான் செய்வார்கள். அதற்கெல்லாம் நான் பதில் சொன்னால் தவறாகிவிடும்” எனத் தெரிவித்துள்ளார்.

Hariharasudhan R

Recent Posts

படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!

ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…

1 day ago

திருமணமானவுடன் சரக்கு பார்ட்டி… பிரியங்காவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…

1 day ago

தலைக்கேறிய மது போதையில் உளறிய குட் பேட் அக்லி நாயகி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…

1 day ago

குக் வித் கோமாளியில் சொல்வதெல்லாம் உண்மை? வெளிவந்தது போட்டியாளர்களின் பெயர்கள்!

தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…

1 day ago

தமன்னாவின் காதலை சிதைத்த சிவகுமார்? கார்த்தியை மிரட்டி கல்யாணம் செய்து வைத்த பகீர் சம்பவம்!

கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…

1 day ago

கனிமொழி எம்பி தேசவிரோதியா? பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சால் பரபரப்பு!

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…

1 day ago

This website uses cookies.