பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி மூன்று ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.முதல் போட்டியின் போது நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ரச்சின் ரவீந்திரா முகத்தில் பந்து பலமாக பட்டு மைதானத்தில் சுருண்டு விழுந்ததால் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையும் படியுங்க: விட்டதை பிடித்த ‘தில் ராஜு’…திடீரென அடித்த லக்கால் நிம்மதி பெருமூச்சு..!
பாகிஸ்தானின் லாகூர் மைத்தனத்தில் பகல்,இரவு ஆட்டமாக தொடங்கிய முதல் ஒரு நாள் போட்டியில் நியூசிலாந்து அணி 330 ரன்களை குவித்தது,அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்யும் போது இரவு நேரம் ஆனதால் மைதானத்தில் போதிய லைட் வெளிச்சம் இல்லாமல் நியூ.வீரர்கள் அடிக்கடி சிரமத்துக்கு ஆளாகினார்கள்.
அந்த சமயத்தில் 38 வது ஓவரின் போது குஸ்தில் ஷா அடித்த பந்தை கேட்ச் பிடிக்க முயற்சி செய்த ரச்சின் ரவீந்திரா முயன்றார்,எல்லோரும் மிகவும் எளிதாக பிடித்து விடுவார் என எண்ணிய போது,பந்து கீழே வரும் போது போதிய வெளிச்சம் இல்லாததால் பந்து அவரது தலையில் பயங்கரமாக விழுந்தது.இதனால் அவரது தலையில் இருந்து ரத்தம் மளமளவென வெளியேறியது,உடனே மைதானத்திற்குள் சென்ற மருத்துவக்குழு அவரை மீட்டு உடனடியாக முதலுதவி அளித்தார்கள்,பின்பு அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்றாலும் மைதானத்தில் நடந்த சோகமான சம்பவத்தால் ரசிகர்கள் உட்பட நியூ.வீரர்கள் மிகவும் அதிருப்தி ஆனார்கள்.இந்த சம்பவத்திற்கு முழு காரணம் சரியான பராமரிப்பு இல்லாத கிரிக்கெட் மைதானம் என ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த சம்பவத்திற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உடனடியாக முன்வந்து இந்த பிரச்சனைகளை சரி செய்ய வேண்டும் என கூறி வருகின்றனர்.ரச்சின் ரவீந்திரா IPL தொடரில் சென்னை அணிக்காக விளையாட உள்ளார்,அவருக்கு ஏற்பட்ட காயத்தால் தமிழக ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.