தேனி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் முருகேசன் தலைமையில் இன்று மாலை ரயில் மறியல் நடைபெற்றது.
இதில் ராகுல் காந்தி எம்பி பதவி பறிக்கப்பட்டதற்கும் மத்திய அரசை கண்டித்து சுமார் 500க்கும் மேற்பட்டோர் தேனி பெரியகுளம் சாலையில் எஸ்பிஐ வங்கி முன்பாக காங்கிரஸ் கட்சியினர் போலீசாரின் தடையை மீறி தேனி ரயில் நிலையத்தில் நிறுத்தி வைத்திருந்த ரயிலின் முன்பாக தண்டவாளத்தில் அமர்ந்து கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் 130 பெண்கள் 180 ஆண்கள் என 310 பேரை கைது செய்து, வாகனத்தில் ஏற்றி தனியார் மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்பாக காங்கிரஸ் கட்சியினர் தேனி ரயில் நிலையத்திற்கு நுழைய முற்படும் போது தேனி டிஎஸ்பி பார்த்திபன் தலைமையிலான போலீசார் அவர்களை தடுத்தபோது, காவல்துறையினருக்கும் காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பின்னர் திடீரென காங்கிரஸ் கட்சியினர் தேனி பெரியகுளம் செல்லும் சாலையில் ரயில்வே கேட்டில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
வரிசையாக லைக் போட்ட விராட் கோலி பாலிவுட் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வருபவர் அவ்னீட் கவுர். இவர் பல ஹிந்தி…
பிரபல இயக்குநர் சொன்ன கதைப்படி படம் முழுவதும் பாவாடை கட்டிக்கிட்டு வரவேண்டும் என்பதால் படத்தில் இருந்து விலகியுள்ளார் சூப்பர் ஸ்டார்.…
தேர்தலை நோக்கி விஜய் வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை நோக்கி விஜய் நடைபோட்டுக்கொண்டிருக்கும் நிலையில் சமீபத்தில் இரண்டு…
விஜய் டிவி நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி பெரிய திரையில் வாய்ப்பு பெற்றவர் நடிகர் யோகி பாபு. டைமிங் காமெடி மூலம்…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பாஜக வடக்கு மண்டல் தலைவராக பாலகிருஷ்ணன் என்பவரது பதவி ஏற்பு விழா உசிலம்பட்டியில் உள்ள தனியார்…
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
This website uses cookies.