கோவை : குழந்தைகள் உதவி எண் 1098 குறித்து விழிப்புணர்வை போத்தனூரில் உள்ள தனியார் பள்ளியில் ரயில்வே போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
ங்கோவை போத்தனூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் குழந்தைகளின் உதவி எண் 1098 குறித்து ரயில்வே போலீசார் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர். அப்போது பள்ளியில் பெண் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை ஏற்பட்டாலோ, ஒன்று அல்லது குழுவாக குழந்தைகள் சந்தேகத்திற்கு இடமாக ரெயில் பயணம் செய்வதைப் பார்த்தாலும், உடல் மன ரீதியாக பாதிக்கப்பட்ட குழந்தைகளை பார்த்தால் அவர்களுக்கு உதவிட இலவச தொலைபேசி எண் 1098ஐ தொடர்பு கொள்ள வேண்டும் என பள்ளி மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மேலும் தண்டவாளப் பாதையை கடப்பது பற்றியும், ஓடும் ரெயிலில் ஏறுவதும் இறங்குவதும் படிக்கட்டில் நின்று பயணம் செய்வதும் மற்றும் செல்போன் பேசிக் கொண்டு செல்வதும், அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றியும் கூறப்பட்டது.
முன் பின் தெரியாத நபர்கள் கொடுக்கும் தின் பண்டங்கள் மற்றும் குளிர்பானங்கள் வாங்கி அருந்த கூடாது என்றும், ஜன்னல் ஓரமாக உட்கார்ந்து செல்லும் பெண்கள் தங்கள் நகைகளை பத்திரமாக பாதுகாத்து கொள்ளவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதேபோன்று அழிந்து வரும் மண் வளத்தை மீட்டேடுக்க வேண்டியதின் அவசியம் குறித்து ஈஷா சம்ஸ்கிரிதி மாணவர்கள் கோவை ரயில் நிலையத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்டுத்தினர். விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 40 மாணவர்கள்கலந்து கொண்டனர். அவர்கள் நடனத்தின் மூலம் மக்களிடம் மண் வளபாதுகாப்பு குறித்து எடுத்துரைத்தனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.