தமிழகம்

அன்று அது நடந்ததால் தான்.. திடீரென கன்னடத்தில் வீடியோ வெளியிட்ட ரஜினிகாந்த்!

தான் படித்த பள்ளியின் 90ஆம் ஆண்டு விழாவுக்கு கன்னடத்தில் பேசி ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் படித்த ஆச்சார்யா பாத ஷாலா (Acharya Pathashala) பள்ளியின் 90வது ஆண்டு விழா கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், பெங்களூருவில் உள்ள இந்தப் பள்ளியில் தான் படித்த நினைவுகளை வீடியோ ஒன்றின் மூலம் ரஜினிகாந்த் பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக ரஜினிகாந்த் கன்னடத்தில் பேசி வெளியிட்டுள்ள வீடியோவில், “நான் உங்களுடன் இருந்திருக்க வேண்டும். ஆனால், தற்போது பாங்காக்கில் ஒரு படப்பிடிப்பில் இருக்கிறேன்.

ஏபிஎஸ் பள்ளி மற்றும் கல்லூரியில் படித்ததில் நான் பெருமைப்படுகிறேன். முதலில், நான் கவிப்பூரில் உள்ள நடுநிலைப் பள்ளியில் படிக்க வந்தேன். அப்போது கன்னட மீடியத்தில் தான் சேர்ந்தேன். அந்த நேரத்தில், நான் வகுப்பில் முதல் மாணவனாக இருந்தேன். அது மட்டுமல்லாமல், நன்றாக படிக்கும் மாணவனாகவும் இருந்தேன்.

அப்போது, நான் தான் கிளாஸ் லீடரும் கூட. பாடங்களில் 98 மதிப்பெண்கள் பெற்றேன். நன்றாகப் படித்து வந்த என்னை, எனது அண்ணன் ஏபிஎஸ் பிள்ளியின் ஆங்கில மீடியத்தில் சேர்த்தார். முழுக்க முழுக்க கன்னட மீடியத்தில் படித்துவிட்டு, ஆங்கில மீடியத்துக்கு மாற்றப்பட்ட பிறகு, முதல் பெஞ்ச் மாணவனான நான், கடைசி பெஞ்சில் மாணவனாக மாறினேன்.

படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் மன அழுத்தத்திலே மூழ்கினேன். ஏபிஎஸ் உயர்நிலைப் பள்ளியின் அனைத்து ஆசிரியர்களும் எனது சிரமத்தை புரிந்து கொண்டு, என் மீது தனிக்கவனம் செலுத்தி பாடம் கற்பித்தனர். எப்படியோ, 9ஆம் வகுப்பு வரை தேர்ச்சி பெற்றேன். ஆனால், 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் பெயில் ஆகிவிட்டேன்.

இதையும் படிங்க: சிறுவனை கட்டாயப்படுத்தி மது அருந்த வைத்த சித்தப்பா… வைரலான வீடியோ.. வெடித்த சர்ச்சை!!

இருப்பினும், ஆசிரியர்கள் என் மீது சிறப்பு கவனம் செலுத்தி, டியூஷன் எடுத்து மீண்டும் தேர்வை எதிர்கொண்டு தேர்ச்சி பெற்றேன். என்னுடைய பள்ளி நாட்களில், நான் பள்ளிகளுக்கு இடையேயான பல்வேறு போட்டிகளில் பங்கேற்றேன். போட்டிகளில் பங்கேற்பதற்கு முன்பு, வகுப்பில் சக மாணவர்களின் வெவ்வேறு கதைகளையும் சொல்வேன்.

நான் பார்த்த படங்களை என் நண்பர்கள் முன் நடித்துக் காண்பிப்பேன். இப்படிச் செய்வது ஆசிரியர்கள் பலருக்கும் தெரியும். இதன் காரணமாக, அவர்கள் நாடகங்களில் நடிக்க எனக்கு வாய்ப்பளித்தனர். ஆதி சங்கரர் சண்டாளர் நாடகத்தில் நான் சண்டாளனாக நடித்தேன். எங்களுடைய நாடகம் அதில் பரிசு பெற்றது. அதற்காக, எங்களுக்கு கேடயமும் வழங்கப்பட்டது.

அன்று எனக்கு சிறந்த நடிகருக்கான விருதும் கிடைத்தது. இப்போது நடிப்பதே எனது தொழிலாகிவிட்டது. முடிந்தவரை, பல குழந்தைகளை மகிழ்விக்க முயற்சி செய்கிறேன். இதற்கெல்லாம் காரணம், ஏபிஎஸ் பள்ளி மற்றும் கல்லூரி” எனத் தெரிவித்து உள்ளார்.

Hariharasudhan R

Recent Posts

படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!

ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…

1 day ago

திருமணமானவுடன் சரக்கு பார்ட்டி… பிரியங்காவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…

1 day ago

தலைக்கேறிய மது போதையில் உளறிய குட் பேட் அக்லி நாயகி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…

1 day ago

குக் வித் கோமாளியில் சொல்வதெல்லாம் உண்மை? வெளிவந்தது போட்டியாளர்களின் பெயர்கள்!

தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…

1 day ago

தமன்னாவின் காதலை சிதைத்த சிவகுமார்? கார்த்தியை மிரட்டி கல்யாணம் செய்து வைத்த பகீர் சம்பவம்!

கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…

1 day ago

கனிமொழி எம்பி தேசவிரோதியா? பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சால் பரபரப்பு!

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…

1 day ago

This website uses cookies.