தமிழகம்

அன்று அது நடந்ததால் தான்.. திடீரென கன்னடத்தில் வீடியோ வெளியிட்ட ரஜினிகாந்த்!

தான் படித்த பள்ளியின் 90ஆம் ஆண்டு விழாவுக்கு கன்னடத்தில் பேசி ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் படித்த ஆச்சார்யா பாத ஷாலா (Acharya Pathashala) பள்ளியின் 90வது ஆண்டு விழா கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், பெங்களூருவில் உள்ள இந்தப் பள்ளியில் தான் படித்த நினைவுகளை வீடியோ ஒன்றின் மூலம் ரஜினிகாந்த் பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக ரஜினிகாந்த் கன்னடத்தில் பேசி வெளியிட்டுள்ள வீடியோவில், “நான் உங்களுடன் இருந்திருக்க வேண்டும். ஆனால், தற்போது பாங்காக்கில் ஒரு படப்பிடிப்பில் இருக்கிறேன்.

ஏபிஎஸ் பள்ளி மற்றும் கல்லூரியில் படித்ததில் நான் பெருமைப்படுகிறேன். முதலில், நான் கவிப்பூரில் உள்ள நடுநிலைப் பள்ளியில் படிக்க வந்தேன். அப்போது கன்னட மீடியத்தில் தான் சேர்ந்தேன். அந்த நேரத்தில், நான் வகுப்பில் முதல் மாணவனாக இருந்தேன். அது மட்டுமல்லாமல், நன்றாக படிக்கும் மாணவனாகவும் இருந்தேன்.

அப்போது, நான் தான் கிளாஸ் லீடரும் கூட. பாடங்களில் 98 மதிப்பெண்கள் பெற்றேன். நன்றாகப் படித்து வந்த என்னை, எனது அண்ணன் ஏபிஎஸ் பிள்ளியின் ஆங்கில மீடியத்தில் சேர்த்தார். முழுக்க முழுக்க கன்னட மீடியத்தில் படித்துவிட்டு, ஆங்கில மீடியத்துக்கு மாற்றப்பட்ட பிறகு, முதல் பெஞ்ச் மாணவனான நான், கடைசி பெஞ்சில் மாணவனாக மாறினேன்.

படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் மன அழுத்தத்திலே மூழ்கினேன். ஏபிஎஸ் உயர்நிலைப் பள்ளியின் அனைத்து ஆசிரியர்களும் எனது சிரமத்தை புரிந்து கொண்டு, என் மீது தனிக்கவனம் செலுத்தி பாடம் கற்பித்தனர். எப்படியோ, 9ஆம் வகுப்பு வரை தேர்ச்சி பெற்றேன். ஆனால், 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் பெயில் ஆகிவிட்டேன்.

இதையும் படிங்க: சிறுவனை கட்டாயப்படுத்தி மது அருந்த வைத்த சித்தப்பா… வைரலான வீடியோ.. வெடித்த சர்ச்சை!!

இருப்பினும், ஆசிரியர்கள் என் மீது சிறப்பு கவனம் செலுத்தி, டியூஷன் எடுத்து மீண்டும் தேர்வை எதிர்கொண்டு தேர்ச்சி பெற்றேன். என்னுடைய பள்ளி நாட்களில், நான் பள்ளிகளுக்கு இடையேயான பல்வேறு போட்டிகளில் பங்கேற்றேன். போட்டிகளில் பங்கேற்பதற்கு முன்பு, வகுப்பில் சக மாணவர்களின் வெவ்வேறு கதைகளையும் சொல்வேன்.

நான் பார்த்த படங்களை என் நண்பர்கள் முன் நடித்துக் காண்பிப்பேன். இப்படிச் செய்வது ஆசிரியர்கள் பலருக்கும் தெரியும். இதன் காரணமாக, அவர்கள் நாடகங்களில் நடிக்க எனக்கு வாய்ப்பளித்தனர். ஆதி சங்கரர் சண்டாளர் நாடகத்தில் நான் சண்டாளனாக நடித்தேன். எங்களுடைய நாடகம் அதில் பரிசு பெற்றது. அதற்காக, எங்களுக்கு கேடயமும் வழங்கப்பட்டது.

அன்று எனக்கு சிறந்த நடிகருக்கான விருதும் கிடைத்தது. இப்போது நடிப்பதே எனது தொழிலாகிவிட்டது. முடிந்தவரை, பல குழந்தைகளை மகிழ்விக்க முயற்சி செய்கிறேன். இதற்கெல்லாம் காரணம், ஏபிஎஸ் பள்ளி மற்றும் கல்லூரி” எனத் தெரிவித்து உள்ளார்.

Hariharasudhan R

Recent Posts

விஜய் பாஜகவோட C team? தவெக குறித்து ஓபனாக போட்டுடைத்த பிரபலம்!

தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…

1 hour ago

ஒரு செங்கலைக் கூட இன்னும் எடுத்து வைக்கவில்லை.. திமுக பாணியை கையில் எடுத்த அண்ணாமலை!

மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…

2 hours ago

சந்தானம் போட்ட கண்டிஷனால் கடுப்பான சிம்பு? STR 49 படம் கைமாறியதற்கு காரணம் இதுதானா?

STR 49  “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…

2 hours ago

தனிமனிதனை வேட்டையாடுவதால் வரலாறை மாற்ற முடியாது : கீழடி அமர்நாத் மாற்றம்.. சு.வெங்கடேசன் கண்டனம்!

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…

2 hours ago

கொரேனா பரவல்.. தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கா? உண்மை இதுதான்!

கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…

3 hours ago

தக் லைஃப் தோல்வியால் சிம்புவுக்கு வந்த பிரச்சினை? கடைசில இப்படி ஆகிடுச்சே!

சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…

3 hours ago

This website uses cookies.