விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் சமூகப்பதற்றத்தை உருவாக்கி வன்முறையை நடத்தும் சதித்திட்டத்தை பாஜக தலைமையிலான கும்பல் முயற்சித்து வருகிறது.
இதையும் படியுங்க: குளிக்கும் போது வீடியோ கால்..கணக்கு மாஸ்டர் நடத்திய பாலியல் பாடம் : பள்ளி மாணவி விபரீத முடிவு!
கடந்த இரு நாட்களுக்கு முன் இராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி- நெல்வாய் கிராமத்தில் இரு கும்பலுக்கிடையே நடந்த பிரச்சனையில் பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளது ஒரு கும்பல்.
இப்போக்கு வன்மையான கண்டனத்துக்குரியதாகும். ஆனால்,இச்சம்பவத்தில் சம்பந்தமே இல்லாத விடுதலைச்சிறுத்தைகளை இணைத்து வைத்து அறிக்கை கொடுத்துள்ளனர்.
ராமதாஸ் அவர்களும் அன்புமணி அவர்களும் கலவரத்தை தூண்ட வேண்டும் எனும் சதித்திட்டமே இருவரது நோக்கமாக உள்ளது. அதன் தொடர்ச்சியாகத்தான்
நேற்று இரவு திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள நெற்குந்தியில் உள்ள புரட்சியாளர் அம்பேத்கர் சிலையை சமூகவிரோதிகள் அவமதிப்பு செய்துள்ளனர்.
சமூகவிரோதிகளை கைது செய்ய வலியுறுத்தி விடுதலைச்சிறுத்தைகள் தற்போது வாணியம்பாடியில் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். அரசு இப்படியான சமூகவிரோதிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் விடுதலைச்சிறுத்தைகள் தேர்தல் அங்கீகாரம் பெற்று அனைத்து மக்களுக்குமான பேரியக்கமாக வலிமை பெற்றுக்கொண்டிருக்கும் சூழலில், அப்பேரியக்கத்தின் மீது அவதூறு பரப்புவதை மருத்துவர் ராமதாஸ் அவர்கள் கைவிட்டு பொறுப்புடனும் நேர்மையுடனும் செயல்பட வேண்டும்.
பாமகவுக்குள் தந்தைக்கும் மகனுக்கும் இடையே நடைபெற்று வரும் அதிகாரப்போரைதிசை திருப்பவே இம்மாதிரியான வன்முறைச்சூழலை உருவாக்குகிறார்கள்.
ஆகவே, தமிழ்நாடு காவல்துறை நேர்மையோடு விசாரித்து உண்மைத்தன்மையை மக்களுக்கு விளக்கவேண்டும்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.