தமிழகம்

பாமகவில் இருந்து அன்புமணி ராமதாஸ் நீக்கம்? அதிரடியாக பேட்டி கொடுத்த ராமதாஸ்!

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாமக மேடையில் டாக்டர் ராமதாஸுக்கும் டாக்டர் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் தந்தை-மகனுக்கு இடையே பிரச்சனை போய்க்கொண்டிருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேச்சுக்கள் கிளம்பின. இருவரும் தனி தனி கோஷ்டிகளை சேர்த்துக்கொண்டு கட்சிக்குள்ளேயே தகராறில் ஈடுபடுவதாகவும் செய்திகள் பரவியது. 

அதனை தொடர்ந்து கடந்த 15 ஆம் தேதி தைலாபுர தோட்டத்தில் மாவட்டச் செயலாளர் மற்றும் மாவட்ட தலைவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தை டாக்டர் அன்புமணி ராமதாஸுடன் 82 மாவட்டச் செயலாளர்களும் 80 மாவட்டத் தலைவர்களும் புறக்கணித்ததாக செய்திகள் வெளிவந்தன. இந்த செய்தியை தொடர்ந்து கட்சிக்குள் இருவருக்கும் இடையே தகராறு இருப்பதாக வலுவான பேச்சுக்கள் பரவத் தொடங்கின.

இந்த நிலையில் சமீபத்தில் ஊடகங்களுக்கு பேட்டியளித்த ராமதாஸ், தனக்கும் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே மனக்கசப்பு எதுவும் இல்லை என பேசியுள்ளார். மேலும் பேசிய அவர், “பாமகவில் இருந்து அன்புமணி ராமதாஸை நீக்கப்போவதாக பல வதந்திகள் கிளம்பியுள்ளன. இப்படிப்பட்ட வதந்திகளை கிளப்பிவிடுபவர்கள் யார் என்று எனக்கு தெரியும். பாமக நான் உருவாக்கிய கட்சி. அன்புமணியை அன்புமணியை நானே கட்சியில் இருந்து நீக்குவேனா?” எனவும் அப்பேட்டியில் அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Arun Prasad

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.