தமிழகம்

‘குடும்பத்தில் இருந்து இன்னொருவரா? எனக்கு அப்டி யாரும் வேணாம்’.. ராமதாஸ் – அன்புமணி மோதல்!

பாமக இளைஞரணி தலைவர் நியமிப்பதில் ராமதாஸ் – அன்புமணி இடையே ஏற்பட்ட மோதலால் பொதுக்குழு கூட்டத்தில் சலசலப்பு நிலவியது.

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், பட்டாணூரில், பாட்டாளி மக்கள் கட்சியின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதனையடுத்து, அன்புமணி ராமதாஸ் மேடையில் பேசினார். அப்போது, “கட்சிக்கு நல்ல நிர்வாகிகள் தேவை. கட்சிக்கு வந்தவுடன் அவர்களுக்கெல்லாம் புதிய பொறுப்புகள் வழங்கப்படுகிறது“ என்று குறிப்பிட்டார்”எனக் கூறினார். இவ்வாறு அன்புமணி ராமதாஸ் பேசி முடித்தவுடன், பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணி தலைவராக முகுந்தன் என்பவரின் பெயரை பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்தார்.

அதுமட்டுமல்லாமல், ‘அன்புமணிக்கு உதவியாக இருக்க வேண்டும்’ எனவும் கூறினார். இதற்கு அன்புமணி ராமதாஸ் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். காரணம், முகுந்தன் என்பவர், ராமதாஸின் மகள்வழிப் பேரன் ஆவார். இதனால், கோபமடைந்த அன்புமணி, கையில் இருந்து மைக்கை மேஜை மீது தூக்கி எறிந்தார். இதனால் விழா மேடையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

மேலும், அன்புமணி ராமதாஸ் தன்னுடைய மொபைல் எண்ணை தொண்டர்களிடம் வழங்கி, எதுவாக இருந்தாலும் தன்னை தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டதால், விழா மேடையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. முன்னதாக, ’கட்சியில் நான்கு மாதம் தான் ஆகிறது. நல்ல அனுபவசாலிகளை போடுங்கள்.” என அன்புமணி கூறினார்.

இதையும் படிங்க: அப்பவே அதிமுக செய்திருந்தால்.. அண்ணா பல்கலை., சம்பவமே நடந்திருக்காது.. கைகாட்டும் கனிமொழி எம்பி!

இதனையடுத்து, “நான் எடுக்கும் முடிவில் விருப்பம் இல்லையென்றால், யாராக இருந்தாலும் கட்சியில் இருந்து விலகிக் கொள்ளலாம்’ என்றார் ராமதாஸ். அப்போது, ‘குடும்பத்தில் இருந்து இன்னொருவரா?’ என முணுங்கினார் அன்புமணி. இந்த நிலையில், தனியார் தொலைக்காட்சி சேனலுக்கு பேட்டி அளித்த பாமக எம்எல்ஏ அருள், “இது சலசலப்பு தான். இன்றே இது சரியாகிவிடு” எனக் கூறியுள்ளார்.

Hariharasudhan R

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.