ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இருந்து புதிய பேருந்து வழித்தடத்தை எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
பரமக்குடியில் இருந்து நயினார்கோவில், ஆட்டாங்குடி ஆகிய கிராமங்களுக்கு புதிய வழித்தடத்தில் பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. பேருந்தை சிறிது தூரம் ஓட்டி எம்எல்ஏ முருகேசன் துவக்கி வைத்தார். ராமநாதபுரம் மாவட்டத்தின் மையப்பகுதியில் பரமக்குடி அமைந்துள்ளது.
பரமக்குடியில் இருந்து நயினார்கோவில், ஆட்டாங்குடி கிராமங்களுக்கு நகரப்பேருந்து இயக்க வேண்டும் என இக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதனை அடுத்து, இன்று பரமக்குடி பேருந்து நிலையத்திலிருந்து சத்திரக்குடி வழியாக நயினார்கோவில் கிராமத்திற்கும், ஆட்டாங்குடி கிராமத்திற்கும் புதிய பேருந்து சேவையை பரமக்குடி எம்எல்ஏ முருகேசன் கொடியசைத்து, ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.
தொடர்ந்து சிறிது தூரம் பேருந்தை எம்எல்ஏ முருகேசன் ஓட்டினார். ஆட்டாங்குடி, நயினார்கோவில் கிராமங்களுக்கு நீண்ட வருடங்களுக்கு பிறகு பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளதால், கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்ததுடன் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.
எம்எல்ஏ முருகேசன் பேருந்தை ஒட்டிய போது ஏய் அண்ணன் வண்டி வருது, விலகு விலகு என தொண்டர்கள் கோஷமிட்டதால் சிரிப்பலை ஏற்பட்டது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.