ராமநாதபுரம் : கள்ளக்காதல் செய்து கழட்டி விட்டதாக 80 வயது முதியவரை தாக்கி படுகொலை செய்த நான்கு இளைஞர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஸ்ரீநிவாசன் தீர்ப்பளித்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் சின்னப்பாலம் பகுதியைச் சேர்ந்தவர் முனியசாமி. இவர் அதே பகுதியில் தனது மனைவியுடன் குடும்பம் நடத்தி வந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு பெண்ணுடன் முனியசாமிக்கு தொடர்பு இருந்ததாகக் கூறப்படுகிறது.
பின்னர், இருவரும் சிறிது காலம் வாழ்ந்து வந்ததாகவும், பின்னர் மீண்டும் தனது மனைவியுடன் முனியசாமி சேர்ந்தது வாழ்ந்து வருவதாக சொல்லப்படுகிறது. இதனால் கள்ளத் தொடர்பில் இருந்த பெண்ணின் உறவினரான முனீஸ்வரன் என்பவர் தனது நண்பர்களான சரவணகுமார், நிர்மல் குமார் மற்றும் முனீஸ்வரன் ஆகிய நண்பர்களுடன் சேர்ந்து, கடந்த 03.01. 2021 ஆம் ஆண்டு அதே பகுதியில் முனியசாமியை கொடுரமாக தாக்கி கீழே தள்ளி விட்டதில் முனியசாமி சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த பாம்பன் போலீசார் நான்கு நபர்களையும் பிடித்து சிறையில் அடைத்து இருந்தனர்.
இந்த வழக்கானது இன்று கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்திற்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்ரீநிவாசன், நான்கு இளைஞர்களுக்கும் ஆயுள் தண்டனை மற்றும் தலா 5,000 அபராதம் விதித்து உத்தரவிட்டார். மேலும், அபராத தொகையை கட்டத்தவறினால் மேலும் 6 மாதம் சிறை என தீர்ப்பளித்தார்.
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
This website uses cookies.