தமிழகம்

ராமாபுரம் மெட்ரோ விபத்து; கோடி ரூபாய் அபராதம்; அதிரடி காட்டிய நிர்வாகம்

சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் மேம்பாலம் கட்டுமானப் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கடந்த ஜூன் 12 ஆம் தேதி பூந்தமல்லி சாலையில் இரவு 9.45 மணியளவில் L&T தலைமை அலுவலகத்தின் அருகே இரண்டு கிரடர்கள் இடிந்து விழுந்தன. இதில் இரு சக்கர வாகனத்தில் பயணித்துக்கொண்டிருந்த ரமேஷ் என்பவர் உயிரிழந்தார்.

இச்சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இந்த விபத்தில் பலியான ரமேஷ் என்பவர் காட்டுப்பாக்கத்தைச் சேர்ந்தவர். இவருக்கு மனைவி மற்றும் 10 வயதில் ஒரு மகளும் உள்ளார். 

இது தொடர்பாக மெட்ரோ ரயில் திட்ட இயக்குனர் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. இந்த விசாரணைக் குழு இந்த விபத்து ஏற்பட்ட காரணத்தை ஆய்வு செய்தது. இந்த ஆய்வில் மெட்ரோ நிறுவனத்தின்  ஒப்பந்ததாரரான L&T நிறுவனத்தின் கவனக்குறைவுதான் இந்த விபத்திற்கு  காரணம் என அறிக்கை சமர்பித்தது. 

இந்த நிலையில் தற்போது L&T நிறுவனத்திற்கு ரூ.1 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விபத்துக்கு நேரடி பொறுப்பாளர்களான L&T நிறுவனத்தின் முதன்மை பாதுகாப்பு மேலாளர், மூத்த ESHS மேலாளர், பாதுகாப்பு பொறியாளர், மூத்த துணை குடியிருப்பு பொறியாளர் ஆகிய நால்வர் மெட்ரோ திட்டப் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். 

Arun Prasad

Recent Posts

ஆங்கிலம் பேசுபவர்களே! இதை எழுதி வச்சிக்கோங்க- சவால் விட்ட அமித்ஷா!

டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…

14 minutes ago

தக் லைஃப் படத்துக்கு முட்டுக்கட்டை போட்டால் கிரிமினல் வழக்கு?- உச்சநீதிமன்றம் அதிரடி

தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…

51 minutes ago

குபேரா படத்தில் இத்தனை வெட்டுக்களா? படத்தில் அப்படி என்னதான் பிரச்சனை!

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…

2 hours ago

24 மணிநேரமும் டாஸ்மாக், நீ குடிச்சே செத்துப்போ- திமுக முன்னாள் எம்எல்ஏ  சர்ச்சை பேச்சு…

“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…

2 hours ago

ஏடிஜிபி வழக்கில் கறார் காட்டிய உச்சநீதிமன்றம்? உத்தரவுக்கு பணிந்த தமிழக அரசு?

காதல் திருமணம் செய்த ஜோடியை பிரிக்கும் நோக்கில் காதலனின் தம்பி என கூறப்படும் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் புரட்சி பாரதம்…

3 hours ago

இனி கனரக வாகனங்களுக்கு அனுமதி இல்லை? காவல் ஆணையர் திடீர் உத்தரவு…

நேற்று பெரம்பூரில் பத்து வயது மாணவி சௌம்யா தனது தாயாருடன் ஸ்கூட்டரில் அமர்ந்துகொண்டு சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த ஸ்கூட்டருக்கு பின்னால்…

4 hours ago

This website uses cookies.