ராணிப்பேட்டை : ஆற்காடு அருகே 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து ஆறு மாத கர்ப்பமாக்கிய பெயிண்டரை போக்சோவில் கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த மேல்விஷராம் ஹாஜிப்பேட்டை அம்சா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சலீம்பாஷா (21). பெயிண்டர் வேலை செய்து வருகிறார். இவர் மனைவி இரண்டாவது பிரவசத்துக்காக தனது தாய் வீட்டுக்கு சில மாதங்களுக்கு முன்பு சென்றுள்ளார். இந்த நிலையில் அதே பகுதியில் சலீம்பாஷாவின் உறவுக்காரர்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், இவரது உறவினரான 14 வயது சிறுமி அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தபோது, சிறுமியின் பாட்டி சலீம் பாஷாவுக்கு கடந்த சில மாதங்களாக தினந்தோறும் சாப்பாடு கொடுத்து வந்துள்ளார்.
இதன் காரணமாக ஒரு நாள் சலீம் பாஷா அந்த சிறுமியை கத்தியை காட்டி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததோடு, அந்த சிறுமியிடம் இதைப்பற்றி வெளியில் யாரிடமாவது சொன்னால் உன்னை கொலை செய்து விடுவதாக கடுமையாக மிரட்டால் விடுத்துள்ளார்.
மேலும், கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமிக்கு திடீரென வயிறு வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அவரின் பெற்றோர் சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது, மருத்துவர் பரிசோதனை செய்த போது, சிறுமி 6 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. பிறகு தொடர்ந்து சிறுமியிடம் பெற்றோர் விசாரித்தபோது, நடந்ததை பற்றி அந்த சிறுமி அவர்களிடம் தெரிவித்தார்.
இதையடுத்து, சிறுமியின் பெற்றோர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீசார், அவனை போக்சோ வழக்கில் சலீம் பாஷாவை கைது செய்தனர். தொடர்ந்து அவரை மகிலா நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி போலீசார் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.