தென்தமிழகத்தின் கடைசி காவல் நிலையமாக விளங்கி வரும் கொல்லங்கோடு காவல்நிலையத்தின் ஆய்வாளராக தாமஸ் என்பவர் பணிபுரிந்து வருகிறார்
தமிழக கேரள எல்லையை ஒட்டி உள்ள பகுதி என்பதால் ஏராளமான சமூக விரோதிகள் பொதுமக்களுக்கு வழங்கக்கூடிய ரேசன் அரசி மற்றும் மண்ணெண்ணெய் உள்ளிட்டவற்றை கடத்தி சென்று விற்பனை செய்து வரும் சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனை பயன்படுத்தி கொண்ட காவல் ஆய்வாளர் தாமஸ் அந்த பகுதியில் உள்ள கடத்தல் கும்பல்களுடன் கைகோர்த்து தொடர்ச்சியாக கடத்துதலுக்கு உடந்தையாக இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் இது சம்பந்தமாக ரகசியமாக விசாரணை நடத்த போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்து இருந்தார்.
இந்த நிலையில் நேற்று கொல்லங்கோடு காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியான திருமன்னம் பகுதியில் அந்த பகுதியை சேர்ந்த மண்ணெண்ணெய் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் 350 லிட்டர் மண்ணெண்ணையை கேரளாவுக்கு கடத்தி செல்வதற்காக சாலையோரம் உள்ள ஒரு கடையின் ஓரம் பதுக்கி வைத்திருந்துள்ளனர்
இதனை பார்த்த பொதுமக்கள் காவல் ஆய்வாளர் தாமஸ்க்கு தகவல் தெரிவித்து உள்ளனர்.
உடனே சம்பவ இடத்திற்கு போலீசார் குழுவுடன் வந்த ஆய்வாளர் பதுக்கி வைத்திருந்த மண்ணெண்ணையை பார்த்துவிட்டு பறிமுதல் செய்யாமல் திரும்ப வந்துள்ளார் இதற்கிடையே வேறொரு கும்பல் அந்த மண்ணெண்ணையை யாருக்கும் தெரியாமல் எடுத்துகொண்டு போய் விற்பனை செய்துள்ளனர்.
ரகசிய போலீஸார் அளித்த தகவலின் பேரில் ஆய்வாளர் தாமஸை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்
இந்த சம்பவம் குமரி மாவட்ட போலீசாரிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது சம்பந்தமான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரயிலில் பயணம் செய்வோர் டிக்கெட் முன்பதிவு செய்யும் மறையில் புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது இந்திய ரயில்வே. இதையும் படியுங்க: என்னை…
நீண்ட இடைவெளிக்குப் பின் பேட்டி… அஜித்குமார் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக எந்த ஊடகங்களுக்கும் பேட்டிக்கொடுக்கவில்லை. அதே போல் எந்த சினிமா…
பிரம்மாண்டம் என்றால் அவர்தான்… தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவில் பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு முதன்முதலில் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் ஷங்கர்தான்.…
பாகிஸ்தான் கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி 15 வயது சிறுவனை கொடுமைப்பத்தியுள்ளது ஒரு கும்பல். உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகர்…
கனவுக்கன்னி தமிழ்நாட்டு இளைஞர்களின் தற்போதைய கனவுக்கன்னியாக வலம் வருபவர்தான் கயாது லோஹர். கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான கயாது,…
உத்தரபிரதேசத்தில் விசித்திரமான சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகிறது. குறிப்பாக மருமகனுடன் மாமியார் ஓடிய சம்பவம் அண்மையில் பேசுபொருளானது. தற்போது தாடி…
This website uses cookies.