தென்தமிழகத்தின் கடைசி காவல் நிலையமாக விளங்கி வரும் கொல்லங்கோடு காவல்நிலையத்தின் ஆய்வாளராக தாமஸ் என்பவர் பணிபுரிந்து வருகிறார்
தமிழக கேரள எல்லையை ஒட்டி உள்ள பகுதி என்பதால் ஏராளமான சமூக விரோதிகள் பொதுமக்களுக்கு வழங்கக்கூடிய ரேசன் அரசி மற்றும் மண்ணெண்ணெய் உள்ளிட்டவற்றை கடத்தி சென்று விற்பனை செய்து வரும் சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனை பயன்படுத்தி கொண்ட காவல் ஆய்வாளர் தாமஸ் அந்த பகுதியில் உள்ள கடத்தல் கும்பல்களுடன் கைகோர்த்து தொடர்ச்சியாக கடத்துதலுக்கு உடந்தையாக இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் இது சம்பந்தமாக ரகசியமாக விசாரணை நடத்த போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்து இருந்தார்.
இந்த நிலையில் நேற்று கொல்லங்கோடு காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியான திருமன்னம் பகுதியில் அந்த பகுதியை சேர்ந்த மண்ணெண்ணெய் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் 350 லிட்டர் மண்ணெண்ணையை கேரளாவுக்கு கடத்தி செல்வதற்காக சாலையோரம் உள்ள ஒரு கடையின் ஓரம் பதுக்கி வைத்திருந்துள்ளனர்
இதனை பார்த்த பொதுமக்கள் காவல் ஆய்வாளர் தாமஸ்க்கு தகவல் தெரிவித்து உள்ளனர்.
உடனே சம்பவ இடத்திற்கு போலீசார் குழுவுடன் வந்த ஆய்வாளர் பதுக்கி வைத்திருந்த மண்ணெண்ணையை பார்த்துவிட்டு பறிமுதல் செய்யாமல் திரும்ப வந்துள்ளார் இதற்கிடையே வேறொரு கும்பல் அந்த மண்ணெண்ணையை யாருக்கும் தெரியாமல் எடுத்துகொண்டு போய் விற்பனை செய்துள்ளனர்.
ரகசிய போலீஸார் அளித்த தகவலின் பேரில் ஆய்வாளர் தாமஸை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்
இந்த சம்பவம் குமரி மாவட்ட போலீசாரிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது சம்பந்தமான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.