கோவையில் சட்டவிரோதமாக ரேஷன் அரிசியை கடத்திய சம்பவத்தில் சிறுவன் உட்பட விற்பனையாளரை போலீசார் கைது செய்தனர்.
தமிழ்நாடு குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்பொழுது, கோவை சரவணம்பட்டி – சேரன் மாநகர் – விளாங்குறிச்சி சாலையில் ஆம்னி வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், சுமார் 1500 கிலோ ரேஷன் அரிசி 30 மூட்டைகளில் இருப்பது தெரிய வந்தது.
மேலும், அந்த வாகனத்தை ஓட்டி வந்த காளப்பட்டியைச் சேர்ந்த சபரி ராஜனிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் காளப்பட்டியைச் சேர்ந்த பாபு மற்றும் விற்பனையாளர் கோபாலன் என்பவர் உதவியுடன் இந்தக் கடத்தலில் ஈடுபட்டது தெரிய வந்தது.
மேலும் அப்பகுதியில் உள்ள பொது மக்களிடம் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசி வாங்கி அதை கேரளா மாநிலத்தில் அதிக விலைக்கு விற்பனை செய்தது ஒப்புக் கொண்டனர். மேலும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டு வந்த பாபு என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். அவர்கள் கடத்தலுக்கு பயன்படுத்திய மாருதி கார், ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்து மேலும் இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
This website uses cookies.