திருவள்ளூர் அருகே ஆந்திராவிற்கு சென்னையிலிருந்து லாரி மூலம் கடத்தப்பட்ட 30 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்த போலீசார் இருவரை கைது செய்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை அருகே தச்சூரில் போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அவ்வழியாக வந்த லாரியை மடக்கி சோதனை மேற்கொண்டனர். அப்போது, சென்னையில் இருந்து ஆந்திர மாநிலத்திற்கு கடத்திச் செல்லப்பட்ட 30 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை கவரைபேட்டை போலீசார் பறிமுதல் செய்தனர்.
லாரியில் இருந்த தஞ்சாவூரை சேர்ந்த சுகுமார் முருகன் ஓட்டுநர்கள் இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பின்னர், பறிமுதல் செய்யப்பட்ட 30 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை மாவட்ட குடிமை பொருள் பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து அவர்களிடம் ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக அரசின் இலவச ரேஷன் அரிசி மூட்டைகள் தொடர்ந்து திருவள்ளூர் வழியாக போலீசாரின் பல்வேறு சோதனைகளை கடந்து ஆந்திர மாநிலத்திற்கு கடத்தப்படும் சம்பவம் தொடர்கதையாகி வருகிறது.
பாகிஸ்தான் கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி 15 வயது சிறுவனை கொடுமைப்பத்தியுள்ளது ஒரு கும்பல். உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகர்…
கனவுக்கன்னி தமிழ்நாட்டு இளைஞர்களின் தற்போதைய கனவுக்கன்னியாக வலம் வருபவர்தான் கயாது லோஹர். கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான கயாது,…
உத்தரபிரதேசத்தில் விசித்திரமான சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகிறது. குறிப்பாக மருமகனுடன் மாமியார் ஓடிய சம்பவம் அண்மையில் பேசுபொருளானது. தற்போது தாடி…
சென்னை புளியந்தோப்பு பகுதியில் அமைச்சர் சேகர் பாபு பங்கேற்கும் நிகழ்ச்சியில், பிளீச்சிங் பவுடருக்கு பதிலாக கோலமாவு போடப்பட்டதாக புகார் எழுந்தது.…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையல், ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே விளாங்காட்டு வலசு கிராமத்தில் தனியாக வசித்து…
ஆக்சன் கிங் சூர்யா? கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த “ரெட்ரோ” திரைப்படம் நேற்று மே தினத்தை முன்னிட்டு வெளியானது.…
This website uses cookies.