காஞ்சிபுரம் ; சோமங்கலம் அருகே சுமார் 15 டன் எடையுள்ள ரேஷன் அரிசி கடத்தி வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் அடுத்த அமரம்பேடு பகுதியில் குன்றத்தூரில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் மார்க்கமாக ரேஷன் அரிசி கடத்தி வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஓரத்தில் உள்ள ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட 15,000 கிலோ எடை கொண்ட அரிசி மூட்டைகள் முழுவதும் ஏரியில் விழுந்து சேதம் அடைந்துள்ளது.
தகவல் அறிந்து விரைந்து சென்ற சோமங்கலம் காவல்துறையினர் இந்த ரேஷன் அரிசி எங்கிருந்து எங்கே கடத்தப்படுகின்றது. யார் இந்த லாரியை ஒட்டி வந்தது..? என பல்வேறு கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.
மேலும், போலீசார் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு கண்ணில் மண்ணை தூவி விட்டு கடத்தி சென்ற ரேஷன் அரிசி லாரி கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
கண்டபடி பேசிய தயாரிப்பாளர் வேதிகா, யோகி பாபு, சாந்தினி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கஜானா”.…
பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு…
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன…
துணிச்சல் நடிகை நடிகை திரிஷா தனது 16 வயதிலேயே மாடலிங் துறைக்குள் வந்தவர். அதனை தொடர்ந்து “ஜோடி” திரைப்படத்தில் சிறு…
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…
தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…
This website uses cookies.