Categories: தமிழகம்

மீன் தூண்டில் முள் குத்தி உயிருக்கு போராடிய சாரைப்பாம்பு : அறுவை சிகிச்சை செய்து காப்பாற்றிய கால்நடை மருத்துவர்கள்!!

விவசாயிகளின் நண்பனாக உள்ள உயிரினங்களில் ஒன்று சாரைப்பாம்பு. பெரும் குழிகளை பறித்து வயல்வெளிகளை கொடையும் எலிகளுக்கு எமனாக விளங்கும் சாரைப்பாம்புகள், எலிகளை இறைக்காக வேட்டையாடுவதனால் விவசாய நிலங்கள் பெருமளவில் பாதுகாக்கப்படுகின்றன.

இந்த பாம்புகள் விசத்தன்மையற்றது. அப்படிப்பட்ட பாம்புகள் வழக்கமாக நிலங்கள், நீர் நிலைகளென அனைத்து இடங்களிலும் பயணிக்கும். அப்படி நீர் நிலையில் இருந்த சாரை பாம்பு ஒன்று, மீன் பிடிக்க சென்ற ஒருவரின் தூண்டில் முள் குத்தி, அதன் கழுத்திலிருந்து செல்லும் உடலில் காயமடைந்திருக்கின்றது.

இதனால் அது தன் இயல்பான சுறுசுறுப்பு வேகத்துடன் ஓட முடியாமல் தவித்து நகர்ந்து சென்றிருக்கின்றது. இதனை பார்த்த குறிச்சி பொதுமக்கள் சாரை பாம்பு உலா வருவதனை, வன உயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை அமைப்பினருக்கு தகவல் தந்திருக்கின்றனர்.

இந்த நிலையில் வன உயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை அமைப்பை சேர்ந்த மோகன் என்ற பாம்பு பிடி வீரர் பாம்பை மீட்க குறிச்சி சென்றார். அப்போது பாம்பு மீட்கப்பட்டது.

உடனடியாக அந்த பாம்பு கோவையில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது சாரைப் பாம்பின் உடலில் குத்தியிருந்த தூண்டில் முள் அகற்றப்பட்டது . இந்த நிலையில் கால்நடை துறை மருத்துவர்கள் சாரை பாம்புக்கான அறுவை சிகிச்சை முடித்து, காயத்துக்கான மருந்துகளை வைத்து கட்டி பேண்டைடு போட்டு விட்டனர்.

இதனை தொடர்ந்து அந்த சாரைப்பாம்பு தமிழ்நாடு வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. தூண்டில் முள் குத்தி உயிருக்கு போராடிய பாம்பை மீட்ட வன உயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை அமைப்பின் பாம்பு பிடி வீரர் மோகன் மற்றும் கால்நடை மருத்துவர்களை வன உயிரியல் ஆர்வலர்கள் வெகுவாக பாராட்டியிருக்கின்றனர் .

குளம், ஏறி, நீர்த்தேக்கங்களில் மீன் பிடிக்க தூண்டில் போடுவோர், அதனை முறையாக கண்காணித்தல் அவசியம் என்று வன உயிரியல் ஆர்வர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.