Categories: தமிழகம்

தமிழ்நாட்டு மக்கள் ஏமாந்து விடுவார்களா?… அண்ணாமலைக்கு என்ன யோக்கியம் இருக்கு ஆர்பி உதயகுமார் கேள்வி?..

அண்ணாமலைக்கு அசைன்மென்ட் கொடுப்பது அமித்ஷாவாக இருக்கட்டும் அதிமுக 2 கோடி தொண்டர்களுக்கு அசைன்மென்ட் எடப்பாடியார் முதலமைச்சர் ஆக வேண்டும்

தமிழ்நாட்டிற்கு நிதி இல்லை பாரதிய ஜனதா கட்சியில் இருந்து தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன செய்ய முடியும் ஆகவே என் பதவியை ராஜினாமா செய்கிறேன் அண்ணாமலை சொல்லி இருந்தால் அவர் தமிழ்நாட்டு மக்களை நேசிக்கிறார்
வாய் கிழிய பேசினால் தமிழ்நாட்டு மக்கள் ஏமாந்து விடுவார்களா? அதிமுகவை பற்றி பேசுவதற்கு அண்ணாமலைக்கு என்ன யோக்கியம் உள்ளது சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் பேச்சு

அம்மாவைப் பற்றி நாலாந்தரமாக பேசிய தா.மோ.அன்பரசனுக்கு கண்டனம் தெரிவிக்காத மு க ஸ்டாலின் தமிழர் கலாச்சாரத்தை கடைப்பிடிக்கிற ஒரு தலைவனாக இருப்பேரானல் உடனடியாக அமைச்சர் பதவியில் இருந்து தாமு அன்பரசனை நீக்க வேண்டும் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் கண்டன பேச்சு

கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியாரின் ஆணைக்கிணங்க கழக ரீதியில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உறுப்பினர்களின் அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது இதன் ஒரு பகுதியாக மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகம் திருமங்கலம் தொகுதி கள்ளிக்குடி ஒருங்கிணைந்த ஒன்றிய கழகத்தின் சார்பில் உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி ஓடைப்பட்டி கிராமத்தில் நடைபெற்றது இதில் ஒன்றிய கழகச் செயலாளர்கள் கண்ணன் ராமையா பிரபுசங்கர் தலைமை தாங்கினார்

உறுப்பினர்கள் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சியில் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் கலந்துகொண்டு நிர்வாகிகளுக்கு உறுப்பினர் அட்டை வழங்கி சிறப்புரையாற்றியதாவது

அண்ணாமலைக்கு அசைன்மென்ட் கொடுப்பது அமித்ஷாவாக இருக்கட்டும் ஆனால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 2 கோடி தொண்டர்களுக்கு எங்கள் எடப்பாடியார் கொடுத்துள்ளார் அதிமுகவை மீண்டும் ஆட்சி கட்டில் அம்மா ஆட்சியை மலர செய்ய வேண்டும் மீண்டும் எடப்பாடியார் முதலமைச்சராக வேண்டும் என்ற அசைமென்ட்

உங்கள் அசைன்மென்ட் என்னவாகும் என்பது ஆண்டவனுக்குத் தான் தெரியும் ஆனால் அதிமுக தொண்டர்கள் இதயத்தில் சுமந்து கொண்டுள்ள அசைன்மென்ட் அது எட்டு கோடி தமிழர்களுக்கும் உள்ள அசைன்மென்ட் மீண்டும் அதிமுக ஆட்சிக்கட்டில் அமைகின்ற அசைன்மென்ட்

சத்துணவு திட்டத்தை கொடுத்த சரித்திர நாயகன் புரட்சித்தலைவர் எம்ஜிஆர்

கட்சியை தொடங்கியவர்கள் யார் வேண்டுமானாலும் ஆட்சியைப் பிடிக்கலாம் என்று சொல்வார்கள் அதைப்பற்றி கவலையில்லை செயல்வீரர்கள் கூட்டத்தில் கட்சிக் கூட்டத்தில் அதிமுகவைப் பற்றி பேசுவதற்கு உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது
வரலாறு தெரியாதவர்கள் வாய்க்கு வந்ததை பேசுகிறார்கள் உண்மையான அதிமுக தொண்டனின் நெஞ்சில் பாய்ந்ததை போல் உள்ளது செயல்வீரர் கூட்டத்தில் பேசும்போது உங்கள் கட்சி தொண்டர்களை உற்சாகப்படுத்த வேண்டும் என்றால் கட்சி திட்டத்தைப் பற்றி பேசுங்கள் உண்மையான தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்றால் மாநிலத் தலைவர் அண்ணாமலை என்ன செய்திருக்க வேண்டும்.

தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டுள்ளது பீகார் ஆந்திராவிற்கு வாரி வழங்கப்பட்டுள்ளது கவலை இல்லை தமிழ்நாட்டிற்கு நிதி இல்லை ஆகவே பாரதிய ஜனதா கட்சியில் இருந்து தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன செய்ய முடியும் ஆகவே என் பதவியை ராஜினாமா செய்கிறேன் அண்ணாமலை சொல்லி இருந்தால் அவர் தமிழ்நாட்டு மக்களை நேசிக்கிறார் என்று இந்த கூட்டத்தில் ஏற்றுக்கொள்கிறோம் வாய் கிழிய பேசினால் தமிழ்நாட்டு மக்கள் ஏமாந்து விடுவார்களா அதிமுகவை பற்றி பேசுவதற்கு என்ன யோக்கியம் உள்ளது என்ன தகுதி உள்ளது எதற்காக நீங்கள் பேசுகிறீர்கள் இப்போது சொல்கிறேன் அண்ணாமலை அவர்களே மீண்டும் புரட்சித் தமிழர் எடப்பாடியார் தலைமையில் அதிமுக அரசு எட்டு கோடி தொண்டர்கள் ஆதரவோடு மலரும் அண்ணாமலை அவர்களைப் புரிந்து கொள்ளுங்கள்

ஆளுகிற கட்சி திமுக இன்றைக்கு கள்ளச்சாராயம் மரணம் இறந்தவர்கள் எத்தனை பேர் என்று தெரியவில்லை. அதிமுகவுடன் பயணித்தீர்கள் திடீரென வேறுபட்டு இருக்கிறீர்கள் இதைப் பற்றி யாரும் வருத்தப்படவில்லை அதிமுக என்பது நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் அல்ல உங்களைப் போன்ற தலைவர்கள் அல்ல எடப்பாடியார் 50 ஆண்டுகால பொது வாழ்க்கைக்கு சொந்தக்காரர் இன்றைக்கு இயக்கத்தை எதிரிகளிடமிருந்து துரோகிகளிடமிருந்து காப்பாற்றுவதற்காக தன்னை அர்ப்பணித்து உழைத்தவர் இந்த அசைன்மென்ட் தமிழ்நாட்டிற்கு வேலை இல்லை ஒரே அசைன்மென்ட் அதிமுக ஆட்சிக்கட்டில் அமரும் எடப்பாடியார் முதலமைச்சராக வருவார்

தா.மோ.அன்பரசன் அமைச்சர் பதவியில் இருப்பதற்கு தகுதியற்றவர் அம்மாவைப் பற்றிய பேசியதற்கு மு க ஸ்டாலின் எந்த கண்டனம் தெரிவிக்கவில்லை. அம்மாவைப் பற்றி நாலாந்தரமாக பேசிய தா.மோ.அன்பரசனுக்கு இன்னமும் கண்டனம் தெரிவிக்காமல் மு க ஸ்டாலின் அவர்களை உண்மையான சபை நாகரிகம் அரசியல் நாகரிகம் அரசியல் பண்பாட்டை தமிழர் கலாச்சாரத்தை கடைப்பிடிக்கிற ஒரு தலைவனாக இருப்பேரானால் உடனடியாக அமைச்சர் பதவியில் தா.மோ. அன்பரசனை இருந்து நீக்க வேண்டும் என்று இந்த கூட்டத்தில் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறேன் என சிறப்புரையாற்றினார்.

Poorni

Recent Posts

இனி திமுகவின் பண பலம், அதிகார பலம் எடுபடாது… 234 தொகுதியிலும் அதிமுகதான் : முன்னாள் அமைச்சர் உறுதி!

மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…

13 hours ago

ஆடியன்ஸ் மேல ஏன் பழி போடுறீங்க? பாட்டு வைக்காதது யார் தப்பு?- மணிரத்னத்தை கண்டபடி கேட்ட பிரபலம்…

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…

13 hours ago

முதலமைச்சர் போட்ட டெல்டாக்காரன் வேஷம் பல் இளிக்கிறது அண்ணாமலை விமர்சனம்!

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…

14 hours ago

அஜித்தின் அடுத்த படம்! தனது சம்பளத்தை எக்குத்தப்பாக ஏற்றிய ஆதிக் ரவிச்சந்திரன்? அடேங்கப்பா!

ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…

14 hours ago

மீசையை முருக்கி பேசுவேன் என திருமா கூறியுள்ளார்.. அதற்காக காத்திருக்கிறோம் : அண்ணாமலை!

திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…

15 hours ago

முதல் திருமணத்தை மறைத்து பல லட்ச ரூபாய் மோசடி!  “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” நடிகையின் கைவரிசை?

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர்  “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…

16 hours ago

This website uses cookies.