தஞ்சாவூர்: திமுக பிரமுகரின் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.100 கோடி மதிப்பிலான இடத்தை மாநகராட்சி நிர்வாகம் கையகப்படுத்தி நோட்டீஸ் ஒட்டியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூரில் திமுக பிரமுகர் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.100 கோடி மதிப்பிலான இடத்தை மாநகராட்சி நிர்வாகம் கையகப்படுத்தியுள்ளது. அரசுக்கு சொந்தமான நிலத்தை கையகப்படுத்தியதுடன் முறைப்படி தெரிவிக்கப்பட்டு நோட்டீஸ் ஒட்டியுள்ளது.
தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே, நூறு ஆண்டுகள் பழமையான சுதர்சன சபா இயங்கி வருகிறது. இந்த சபாவில் நாடகம் மற்றும் சொற்பொழிவுகள் நடத்தப்பட்டு வந்தது. இப்படி கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வந்த, சுதர்சன சபா, இடையில் தி.மு.க பிரமுகரான ஆர்.கே. ராமநாதன் என்பவருக்கு 99 ஆண்டு காலத்திற்கு குத்தகைக்கு விடப்பட்டது.
நாளடைவில், சுதர்சன சபா வளாகத்தில் மதுக்கூடம், ஹோட்டல், செல்போன் விற்பனைகடை, பேக்கரி ஆகியவை தனியாரால் கட்டப்பட்டன. அவைகள் அனைத்தும் உள்வாடகைக்கு விடப்பட்டு வந்துள்ளது. இவை எல்லாம் மாநகராட்சி அனுமதி இன்றி நடந்துள்ளது.
மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வாடகை பாக்கியம் கட்டப்படவில்லை. இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது. இதனையடுத்து தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் மேற்கொண்ட முயற்சியின் விளைவாக, மாநகராட்சிக்கு சொந்தமான 40 ஆயிரத்து 793 சதுர அடி கொண்ட இடம் மீட்கப்பட்டுள்ளது.
ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றுதல் சட்டத்தின் படி, அந்த இடத்தை மாநகராட்சி வசம் கையகப்படுத்தி தண்டோரா போட்டு நகரமைப்பு அலுவலர் ராஜசேகரன், பொறியாளர்கள் கண்ணதாசன், மகேந்திரன், மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் சந்திரா ஆகியோர் முன்னிலையில் அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டினர்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.