Categories: தமிழகம்

மறுவாழ்வு கொடுக்கும் பள்ளி மாணவன்.. ஈட்டி பாய்ந்து பலியான சிறுவனின் பெற்றோர் செய்த நெகிழ்ச்சி!

கடலூர் மாவட்டம், வடலூர் பார்வதிபுரத்தை சார்ந்த கூலி தொழிலாளியான திருமுருகன் சிவகாமி தம்பதியின் மகனான கிஷோர் வடலூரிலுள்ள எஸ் டி சியோன் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு கல்வி பயின்று வந்தார்.

கிஷோர் சிலம்பாட்டத்தில் பயின்று உலக நோபுள் ரெக்கார்டு சாதனையும் நிகழ்த்தி இருக்கிறார். இந்நிலையில் கடந்த 24.07.2024 ஆம் தேதி தனியார் பள்ளியில் மாணவர்கள் ஈட்டி எறிதலுக்கான பயிற்சியை மேற்கொண்டிருந்தபோது சிலம்பத்திற்கான பயிற்சி மேற்கொண்டிருந்த கிஷோர் என்ற மாணவனின் தலையில் குத்தி ரத்த படுகாயமடைந்தார்.

இதனையடுத்து பள்ளி மாணவன் வடலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்தும் பலனளிக்காததால் மேல் சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கும் மருத்துவர்கள் பள்ளி சிறுவனை காப்பாற்ற இயலாது மூளைச்சாவு அடைந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து நேற்றைய தினம் முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிறுவன் சிகிச்சைகாக அனுமதித்தனர்.

அப்போது மூளைச்சாவு அடைந்துள்ளதால் மாணவனை காப்பாற்ற இயலாது என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவன் இன்று ஜூலை 30 பகல் 12 மணி அளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சிறுவனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது பெற்றோர்கள் திருமுருகன் சிவகாமி சம்மதம் தெரிவித்த போது சிறுவனின் இதயம் பலவீனமாக உள்ளதால் உடல் உறுப்பு தானம் பெறுவதில் சிரமம் உள்ளதாக பெற்றோர்களிடத்தில் தெரிவித்துள்ளனர்.

இதனிடயே சிறுவன் உயிரிழந்ததால் மாணவனின் கண் தானத்தை மட்டும் ஏற்றுக்கொண்டனர். சிறுவனை இழந்த குழந்தையின் தந்தையான திருமுருகன் தனது மகனுக்கு ஏற்பட்ட இந்த நிலை மற்ற மாணவர்களுக்கும் ஏற்பட கூடாது என்றும் போதிய மைதானம் வசதி இல்லாமல் பயிற்சி மேற்கொண்டதால் பள்ளி நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெற்றோர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?

யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…

9 hours ago

ஊழல் கூட்டணி எங்களை பற்றி பேசுவதை பார்த்தால் சிரிப்பு தான் வருது : இறங்கி அடிக்கும் நிர்மலா சீதாராமன்!

சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…

11 hours ago

லோகேஷ் கனகராஜ்ஜுக்கும் அந்த விபரீத ஆசை வந்திடுச்சா? விரைவில் எடுக்கப்போகும் புதிய அவதாரம்!

லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…

11 hours ago

திருத்தணி கோவிலில் குடும்பஸ்தன் பட பாணியில் திருமணம்… ரகளைக்கு நடுவே நடந்த கலாட்டா காதல் கல்யாணம்!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…

12 hours ago

சந்தோஷ் நாராயணனை அவமானப்படுத்திய நபர்! விழுந்து விழுந்து சிரித்த சூர்யா? இப்படியா பண்றது?

கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…

12 hours ago

முழு சந்திரமுகியாக மாறிவரும் சங்கி : பிரபல பத்திரிகையை விளாசிய தவெக ராஜ்மோகன்!

விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…

13 hours ago

This website uses cookies.