Categories: தமிழகம்

மறுவாழ்வு கொடுக்கும் பள்ளி மாணவன்.. ஈட்டி பாய்ந்து பலியான சிறுவனின் பெற்றோர் செய்த நெகிழ்ச்சி!

கடலூர் மாவட்டம், வடலூர் பார்வதிபுரத்தை சார்ந்த கூலி தொழிலாளியான திருமுருகன் சிவகாமி தம்பதியின் மகனான கிஷோர் வடலூரிலுள்ள எஸ் டி சியோன் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு கல்வி பயின்று வந்தார்.

கிஷோர் சிலம்பாட்டத்தில் பயின்று உலக நோபுள் ரெக்கார்டு சாதனையும் நிகழ்த்தி இருக்கிறார். இந்நிலையில் கடந்த 24.07.2024 ஆம் தேதி தனியார் பள்ளியில் மாணவர்கள் ஈட்டி எறிதலுக்கான பயிற்சியை மேற்கொண்டிருந்தபோது சிலம்பத்திற்கான பயிற்சி மேற்கொண்டிருந்த கிஷோர் என்ற மாணவனின் தலையில் குத்தி ரத்த படுகாயமடைந்தார்.

இதனையடுத்து பள்ளி மாணவன் வடலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்தும் பலனளிக்காததால் மேல் சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கும் மருத்துவர்கள் பள்ளி சிறுவனை காப்பாற்ற இயலாது மூளைச்சாவு அடைந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து நேற்றைய தினம் முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிறுவன் சிகிச்சைகாக அனுமதித்தனர்.

அப்போது மூளைச்சாவு அடைந்துள்ளதால் மாணவனை காப்பாற்ற இயலாது என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவன் இன்று ஜூலை 30 பகல் 12 மணி அளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சிறுவனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது பெற்றோர்கள் திருமுருகன் சிவகாமி சம்மதம் தெரிவித்த போது சிறுவனின் இதயம் பலவீனமாக உள்ளதால் உடல் உறுப்பு தானம் பெறுவதில் சிரமம் உள்ளதாக பெற்றோர்களிடத்தில் தெரிவித்துள்ளனர்.

இதனிடயே சிறுவன் உயிரிழந்ததால் மாணவனின் கண் தானத்தை மட்டும் ஏற்றுக்கொண்டனர். சிறுவனை இழந்த குழந்தையின் தந்தையான திருமுருகன் தனது மகனுக்கு ஏற்பட்ட இந்த நிலை மற்ற மாணவர்களுக்கும் ஏற்பட கூடாது என்றும் போதிய மைதானம் வசதி இல்லாமல் பயிற்சி மேற்கொண்டதால் பள்ளி நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெற்றோர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.