புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள பொன்னன்விடுதியை சேர்ந்த புவனேஸ்வரி(27) என்ற பெண்ணை அதே ஊரைச் சேர்ந்த தாய் மாமன் மகனாகிய பழனிராஜ் என்பவருக்கு கடந்த 2021ம் ஆண்டு திருமணம் செய்து வைத்துள்ளனர்.
பழனிராஜ் திருமணமானன ஒரு வருடத்திலேயே அதே ஊரைச் சேர்ந்த பிரபா என்ற வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு நாகர்கோவில் பகுதியில் வாழ்ந்து வருவதாகவும், இவர்களுக்கு இரண்டு குழந்தை உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் புவனேஸ்வரி கடந்த இரண்டு ஆண்டாக தன் கணவனைப் பிரிந்து தாயார் வீட்டில் இருந்து வருகிறார்.
தனது தந்தையும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இறந்து விட்டதால் மன உளைச்சலில் இருந்த புவனேஸ்வரி, இரவு தன் தந்தை வீட்டின் அருகே இருந்த தந்தைக்குச் சொந்தமான கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில் புவனேஸ்வரி தற்கொலை செய்து கொண்டதற்கு அவரது கணவர் தான் காரணம் என்று பெண்ணின் உறவினர்கள் குற்றம் சாட்டி வந்த நிலையில் தற்பொழுது உடல் கூறு ஆய்வு செய்யப்பட்ட பெண்ணின் சடலத்தை கணவன் வீட்டு முன்பு வைத்து பெண்ணின் உறவினர்கள் எரித்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் அந்தப் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர், போலீசார் இருக்கும் பொழுது பெண்ணின் சடலத்தை அவரது கணவர் வீட்டு வாசலில் வைத்து எரித்து வருவதால் பதட்டமான சூழ்நிலைக்கு வருகிறது.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.